ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Friday, November 15, 2013

கோட்சார ராகு/ கேது

ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent ) என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!)

அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர் என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்... இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...?? வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வரா...!!

கேட்ட நேரம் இருக்கும் வரை ... அந்த ஒண்ட வந்த பிடாரி தான் உங்களுக்கு அவ்வளவு உசத்தியாக தெரியும்... அவளுக்காக நீங்கள் சகலத்தையும் துறக்க தயார் ஆகி விடுவீர்கள்.. உங்களுக்கு அது ஒரு சொகுசான வாழ்வு என்று தோன்றும்.. ஆனால் மகா கேவலமான வாழ்வு என்று தோன்றாது..


இதில் கோட்சார ரீதியாக ராகு ஜென்மத்தில் வந்தாலோ ... இன்னும் நிலைமை அசிங்கமாகும்.. நீங்கள் இருக்கும் ஊரில், அல்லது தெருவில் அல்லது , உங்கள் குடும்ப வட்டாரத்தில் ... நீங்கள் ஏதாவது ஒரு பெண் விஷயத்தில் அசிங்கப்பட்டு , தலை குனிய வேண்டி வரும்...

இல்லையா... கோடிகளில் புரள வைத்து விட்டு , திடீர் என்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்..

இது பொதுவான பலன். ஆனால் 10 க்கு 9 பேருக்கு இது பொருந்தும்.

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது.. அவர்கள் அமர்ந்த வீடு, (நட்பு , பகை) நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும் கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் , என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

எந்த ஒரு மனிதனுக்கும், ராகு, கேது தசை நடக்கும் போது , அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் ... அட்சர சுத்தமாக கிடைக்கும்..
சில குழந்தைகளுக்கு ராகு தசை நடந்தால், அதன் பலன் மொத்தமும் பெற்றோர்களுக்கு நடக்கும்...

நல்லதும் உண்டு.. கெட்டதும் உண்டு... ஐயா.. போன ஜென்மத்திலே எப்படி இருந்தேன் னு தெரியலை.. இந்த ஜென்மத்திலே என்ன பண்றது...? நான் தப்பு பண்ணக் கூடாது.. என்ன வழி..?

இந்த கேள்வி உங்களுக்கு தோணுவதற்கே நீங்க பண்ணின ஒரு புண்ணியம் தான் காரணமாக இருக்கும்..


ராகுவுக்கு அதி தேவதை துர்க்கை. ராகுவுக்கு தனியாக கிழமை கிடையாது.. தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.. ராகு காலம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள்... இந்த ஒன்றரை மணி நேரத்தில் , நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் சென்று விடுங்கள். காளியம்மன், மாரியம்மன் என்றும் இருக்கலாம். தினமும் நாள் தவறாமல் செல்ல வேண்டும். அதனால் தான் அருகில் இருக்கும் ஆலயம் என்று சொன்னேன். ஒரு நூறு வருடமாவது பழைய ஆலயமாக இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ராகுகாலம் முடியும் கடைசி அரை மணி நேரத்தில் இருங்கள்.

மனதார வழிபடுங்கள்.

நீங்கள் அன்றாடம் வேலைக்கு போக வேண்டி இருந்தால், செல்ல முடியாதே.. என்ன செய்வது?

திருமணம் ஆகி இருந்தால் உங்கள் மனைவியோ, மணம் ஆகா விட்டால் உங்கள் சார்பாக உங்கள் தாயோ செல்லலாம். நீங்கள் வேலைக்கு செல்லாத நாட்களில் கண்டிப்பாக நீங்களே சென்று வர வேண்டும். ஞாயிற்று கிழமை சாயங்காலம் 4 .30 இலிருந்து 6 மணி வரை வரும். Miss பண்ணாதீங்க !!


 

சாயா கிரகம் சர்ப்ப கிரகம் என அழைக்கப்படும் ராகு & கேது முழு பாவிகளாவார்கள். இவர்களுக்கு சொந்த வீடு இல்லை. எந்த ராசியில் அமைகிறார்களோ அந்த ராசியை  தன் சொந்த வீடாகக் கொண்டு பலன் தருவார்கள். கோட்சார  ரீதியாக ஒரு ராசியில் ஒன்றரை வருட காலம் தங்குவார்கள். எல்லா கிரகமும் முன்னோக்கிச் செல்லும் இயல்பு பெற்றுள்ளனர். ஆனால் ராகு கேது இருவரும் பின்னோக்கி சஞ்சாரம் செய்கிறார்கள். 3,6,11ல் வரும் போது கோட்சார ரீதியாக சிறப்பான பலன்களை தருகிறார்கள். ராசி கட்டத்தில் ஜென்ம ராசியில் ராகு 7ல் கேது அல்லது ஜென்ம ராசியில் கேது, 7ல் ராகு வாகவோ அல்லது குடும்ப ஸ்தானமான 2ல் ராகு அஷ்டம ஸ்தானமான 8ல் கேதுவாகவும், 2ல் கேது அஷ்டம ஸ்தானமான 8ல் ராகு என சஞ்சரிக்கும் போது ஜாதகருக்கு பல விதமான சோதனைகளையும் உடல் நல பாதிப்புகளையும் எதிர்பாராத விபத்துக்களையும் சந்திக்கும் அமைப்பையும் உண்டாக்குவதும் மட்டுமின்றி குறிப்பாக  மண வாழ்வு ரீதியாக அதிக சோதனை ஏற்படுத்தி விடுவார்கள். கணவன் மனைவி இடையே பிரிவுகள் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஒற்றுமை குறையும். திருமணத் தடைகளையும் உண்டாக்குகிறார்கள். 
குறிப்பாக யாருக்கு ராகு கேது கோட்சாரத்தில் அதிக கெடுதியை மண வாழ்வு ரீதியாக ஏற்படுத்துகிறார் என பார்த்தால் ஜென்ம நட்சத்திரம் ராகு கேதுவின் நட்சத்திரமான அசுவினி,திருவாதிரை,மகம்,சுவாதி, மூலம், சதயமாகவோ அமையப் பெற்றாலும் சந்திரனுடன் ஜெனன காலத்தில் ராகு கேது சேர்க்கை பெற்றிருந்தாலும் ஜெனன காலத்தில் அனைத்து கிரகமும் ராகு கேதுக்குள் அமையப் பெற்று கால சர்ப்ப தோஷத்தில் பிறந்தவர்களுக்கும் அதிக கெடுதி ஏற்படுகிறது. இக்காலத்தில் ராகு கேதுக்களுக்கு வழிபாடு சர்ப்ப சாந்தி துர்க்கை வழிபாடு விநாயகர் வழிபாடு பாம்பு புற்றுக்கு பால் வைப்பது திரு நாகேஸ்வரம், திரு காளஹஸ்தி சென்று பால் அபிஷேகம் செய்து தொடர்ந்து வழிபாடு செய்வது வருவதால் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் விலகி ஒற்றுமையும் நன்மைகளும் உண்டாகும்.




கேதுவின் பலன்கள்......
ஒருவர் ராசியில் கேது நிற்கும் சமயம் நன்றாக இருக்காது. முயற்சிகள் தடைபடும், வீண்பகை உண்டாகும். உடல் ஆரோக்கியம் கெடும்.
ராசிக்கு 3-இல் கேது வரும் சமயம் கவலைகளும், கஷ்டங்களும் இருக்கும். பணத்தைக் கெட்டதற்காகவே செலவு செய்வான். ஆனால், ராசிக்கு 3-இல் வரும்போது நல்ல நிலைமை உருவாகும். எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். மன அமைதியும் உடல் ஆரோக்கியமும் உண்டாகும்.
 ராசிக்கு 4-இல் கேது வரும் சமயம் அப்படியே எதிர் மாறாக நடக்கும். தீயோர் சகவாசத்தினால் பொருள் சேர்ப்பும், இழப்பும் இருக்கும். பணம் கையில் புழங்கும். ராசிக்கு 4-இல் வரும்போதும் அப்படித்தான்.பகை, நோய், துயரம் எல்லாம் இருக்கும்.
ராசிக்கு 6-இல் கேது வரும் சமயம் எல்லா கஷ்டங்களும் விலகும். பொருள் வசதி பெருகும். ஆரோக்கியம், ஆனந்தம் நிலவும்.
கேது 7-இல் வரும்போது காரிய தாமதம், குடும்பத்தில் சச்சரவு, நோய், கவலைகள் இருக்கும்.

கேது 8-க்கு வரும்போது மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 9-க்கு வரும்போது தொல்லைகள் இருக்கலாம்
ஆனால், 10-க்கு வரும்போது நல்ல பலன்கள் உண்டாகத் தொடங்கும். உடல் நலம் நன்றாக இருக்கும்.
கேது, ராசிக்கு 12-இல் வரும்போது நண்பர்களால் பொருள் விரயம் எல்லாம் இருக்கும்.

ராகுவின் பலன்கள்........
ஒருவர் ராசியில் ராகு வந்து தங்கும் சமயம் பந்த பாசங்களில் மனக்கசப்பு உண்டாகும். தவறான வழிகளில் வந்த பணத்தால் நோய் வந்து செலவை ஏற்படுத்தும். சுபர் பார்த்தால் தீயவை அனைத்தும் மாறி நல்லது நடக்கும்.
ராசிக்கு 2-இல் ராகு வரும்போதும் இப்படித்தான் இருக்கும்.
ராசிக்கு 3-இல் ராகு வரும் போது நிலைமைகள் சீரடையும்.
தொடங்கும் காரியம் சிறப்படையும். வசதிகள் பெருகும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். தீய குணங்கள் விலகி நல்ல குணங்கள் உண்டாகும்.
ராசிக்கு 4-இல் ராகு வரும்போது குடும்பம் அமைதி இழக்கும். சிலருக்கு இடமாற்றம் இருக்கும்.
ராசிக்கு 5-இல் வரும்போது இந்த விரும்பத் தகாத சூழ்நிலை நீடிக்கும்.
ஆனால் ராசிக்கு 6-இல் ராகு வரும் சமயம் நிலைமை சீரடையும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தீய குணங்கள் விலகி, நல்ல குணமுடையவனாவான்.
ராகு, ராசிக்கு 7-இல் வரும்போது கெட்டவர்களின் சகவாசத்தால் துன்பங்கள் உண்டாகும். இடம் விட்டு இடம் செல்ல நேரிடும்.

ராசிக்கு 8-இல் வரும் சமயம் எடுத்த காரியங்களில் தடைகள் வந்தாலும் சுபக்கிரகங்கள் பார்த்தால் தடைகள் நீங்கி காரியங்கள் வெற்றி பெறும்.
ராகு 9-இல் வரும்போது விஷக்கடியால் துன்பம் ஏற்பட்டு சுகமாகும்.
ராகு 10-இல் வரும்போது செலவுகள் அதிகமாகும். குரு பார்த்தால் குறைகள் நீங்கி நிறைந்த பலன் கிடைக்கும்.
ராகு 11-இல் வரும்போது நன்றாக இருக்கும்.
பொருளாதாரம் சீரடையும், உடல் நலம் நன்றாக இருக்கும்.
ராகு 12-இல் நன்றாக இருக்காது. குடும்ப அமைதிய கெடும். மருத்துவச் செலவு ஏற்பட்டு, பொருள் நஷ்டம் உண்டாகும். கஷ்டங்களும், கவலைகளும் இருக்கும். ஆனாலும் சுபவலிமைபெற்ற கிரகங்கள் சேர்க்கையிருந்தால் கஷ்டங்கள் தீரும். நன்மை உண்டாகும்.


மற்ற கோட்சார பலன்களை அறிய இங்கே சொடுக்கவும்

மேலும் ராகு / கேது, கால சர்ப்ப தோஷம் பற்றி அறிய, Click செய்யவும்