ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, September 22, 2014

கிழமை, கரண, யோக, திதிகளில் பிறந்தவன் பலன்




இவை அனைத்தும் பொது பலன்களே. ஜாதக கிரக அமைப்பை பொருத்து இவை மாறுபடும், 

கிழமைகளில் பிறந்தவர் பலன்

1)
ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவன்.செல்வம் உடையவனாய் இருப்பான்
2)
திங்கள்கிழமையில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்
3)
செவ்வாய்க்கிழமையில் பிறந்தவன். தந்திரக்காரனாய் இருப்பான்
4)
புதன் கிழமை பிறந்தவன், கல்வி உடையவனாய் இருப்பான்.
5)
வியாழக்கிழமை பிறந்தவன்,அறநெறியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்
6)
வெள்ளிக்கிழமை பிறந்தவன், உயர்ந்த காரியங்களைச் செய்பவனாய் இருப்பான்
7)
சனிக்கிழமை பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் திறமைசாலியாக இருப்பான்

பிறந்த கரணங்களில் பலன்

1)
பவ கரணத்தில் பிறந்தவன்.அச்சம் இல்லாதவனாய் இருப்பான் 
2)
பாலவ கரணத்தில் பிறந்தவன், பல நற்குணங்களை உடையவனாய் இருப்பான். 
3)
கௌலவ கரணத்தில் பிறந்தவன், நல்ல ஓழுக்கங்களை உடையவனாய் இருப்பான் 
4)
தைதுலை கரணத்தில் பிறந்தவன்,உத்தியோகத்தில் ஆர்வம் உள்ளவனாய் இருப்பான் 
5)
கரசைக் கரணத்தில் பிறந்தவன்,பிற மாதரிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்
6)
வணிசைக் கரணத்தில் பிறந்தவன்.இனிக்கப் பேசும் இயல்பு உடையவனாய் இருப்பான்
7)
பத்திரைக் கரணத்தில் பிறந்தவன், எதிலும் விரைவில் சலிப்பு அடைபவனாய் இருப்பான்,
8)
சகுனிக் கரணத்தில் பிறந்தவன், நல்ல அறிவாளியாக விளங்குவான்,
9)
சதுஷ்பாத கரணத்தில் பிறந்தவன்.தத்துவ நூல்களில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
10)
நாகவ கரணத்தில் பிறந்தவன், மிக்க மானம் உள்ளவனாய் இருப்பான்

பிறந்த யோகங்களில் பலன்

விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு உள்ளவனாய் இருப்பான்
பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய் இருப்பான்,
ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய் இருப்பான்
சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி உடையவனாய் இருப்பான்.
சோபன யோகத்தில் பிறந்தவன்,மானம் உள்ளவனாய் இருப்பான்.
அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்,புகழ் உடையவனாய் இருப்பான்.
சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில் விருப்பம் உடையவனாய் இரு
திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப் பேசுபவனாய் இருப்பான்.
சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய் இருப்பான்.
கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான்.
விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு உடையவனாய் இருப்பான்.
துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி உடையவனாய் இருப்பான்.
வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர் செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்,அறிவாளியாக இருப்பான்.
வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
சித்தியோகத்தில் பிறந்தவன், எல்லாருக்கும் நல்லவனாக விளங்குவான்.
வரீயான் யோகத்தில் பிறந்தவன்,பகைவரை ஒடுக்குவதிலேயே ஆர்வம் உள்ளவனாய் இருப்பான்.
வாரீயன் யோகத்தில் பிறந்தவன்,உண்மையை மறைப்பதில் திறமை உள்ளவனாய் இருப்பான்.
பரிக யோகத்தில் பிறந்தவன், பிறரை ஏமாற்றுவதில் கெட்டிக்காரனாய் இருப்பான்
சிவயோகத்தில் பிறந்தவன், பெற்றோர்களைப் பேணுவதில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சித்தி யோகத்தில் பிறந்தவர், செல்வ செல்வாக்கு உள்ளவர்
சாத்திய யோகத்தில் பிறந்தவர், கலைகளில் வல்லுநனாய் இருப்பான்.
சுபயோகத்தில் பிறந்தவன், பெண்களிடம் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
சுப்ரயோகத்தில் பிறந்தவன், முன்கோபக்காரனாய் இருப்பான்
பிராம்ய யோகத்தில் பிறந்தவன், பிறருக்கு உதவுவதிலேயே நாட்டம் உடையவனாய் இருப்பான்.

பிறந்த திதிகளில் பலன்

பிரதமையில் பிறந்தவன்,எதையும் ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பான்.
துவிதியையில் பிறந்தவன், பொய் பேச வெட்கப்படுவான்.
திருதியையில் பிறந்தவன், நினைத்த காரியத்தை முடிப்பான்.
சதுர்த்தியில் பிறந்தவன், மந்திர சித்தியில் விருப்பம் உடையவனாய் இருப்பான்.
பஞ்சமியில் பிறந்தவன், பெண்களிடத்தில் ஆசை உடையவனாய் இருப்பான்.
சஷ்டியில் பிறந்தவன், செல்வர்களால் விரும்பப்படுவான்.
சப்தமியில் பிறந்தவன், இரக்கம் உடையவனாய் இருப்பான்.
அஷ்டமியில் பிறந்தவன்,குழந்தைகளிடத்தில் பிரியம் உள்ளவனாய் இருப்பான்.
நவமியில் பிறந்தவன்,புகழில் நாட்டம் உடையவனாய் இருப்பான்.
தசமியில் பிறந்தவன், ஒழுக்கம் மிக்கவனாய் இருப்பான்.
ஏகாதசியில் பிறந்தவன், பொருள் ஈட்டுவதில் நாட்டம்
உள்ளவனாய் இருப்பான்.
துவாதசியில் பிறந்தவன்,புதுமையான தொழில்களில் ஈடுபடுவான்.
திரயோதசியில் பிறந்தவன்,உறவினர்களோடு ஓட்டி வாழமாட்டான்.
சதுர்த்தசியில் பிறந்தவன்,பிறர் செய்த சிறு தவறுகளையும் மன்னிக்கமாட்டான்
பௌர்ணமியில் பிறந்தவன்,மிகவும் தெளிவான சிந்தனா சத்தி உடையவனாய் இருப்பான்.
அமாவாசையில் பிறந்தவன், தன் அறிவையும், ஆற்றலையும் மேலும் பெருக்கிக்கொள்வதிலேயே ஆர்வம் உடையவனாய் இருப்பான்.