ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Saturday, June 14, 2014

பெயர் கூட்டு எண்: 1 பலன்கள் - Numerology



பெயர் எண்:   1

பெயர் எண் கூட்டுத்தொகை :  10  

10ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் கண்ணியமும், கீர்த்தியும் உடையவர்கள். வாழ்க்கையில் அடிக்கடி அதிர்ஷ்ட மாற்றங்கள் ஏற்படும். எளிதாகப் பிரபலம் அடைவர். எனவே, இவர்களுடைய நடவடிக்கைகள் நேர்மையாக இருக்க வேண்டியது அவசியம். மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. ஒருநாளும் பணத் தட்டுப்பாடு ஏற்படாது. 



பெயர் எண் கூட்டுத்தொகை :  19 

19ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்களுடைய வாழ்க்கை தொடர்ந்து மேன்மை அடைந்துகொண்டே இருக்கும். பதவி, கௌரவம், மகிழ்ச்சி, வெற்றி, செல்வம் எல்லாம் அதிகரித்துக்கொண்டே போகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வயோதிகத்திலும் இளைஞர்களைப் போலச் சுறுசுறுப்பாக இருப்பர். இவர்களுடைய நேர்மையே இவர்களுக்கு வெற்றி அளிக்கும். 

பெயர் எண் கூட்டுத்தொகை :  28 

28ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எந்தக் காரியத்தைச் செய்தாலும் போட்டியும் சிரமமும் அதிகரிக்கும். வாழ்க்கையைத் திரும்பத் திரும்பத் தொடங்க நேரும். பலர் மிக வேகமாக முன்னேறுவர்; ஆனால், கடைசியில் எல்லாவற்றையும் இழக்க நேரும். நண்பர்களாலும், உறவினர்களாலும் எதிர்பாராத நஷ்டங்கள் வரும். கொடுத்த கடனை வசூலிப்பது கடினம். கஷ்டப்பட்டுச் சேர்த்த பொருள்களையெல்லாம் எதிர்பாராமல் இழக்கநேரும். 

பெயர் எண் கூட்டுத்தொகை :  37

37ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் வசீகரத்தையும், காதலில் வெற்றியையும் பெறுவர். தங்களுடைய அந்தஸ்திற்கு மேற்பட்டவர்களால் விரும்பப்படுவர். ஆண்களுக்குப் பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் அதிக உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் முன்னேற்றம், வியாபாரத்தில் அதிர்ஷ்டம். பலவித முயற்சிகளால் பொருள் சேர்க்கை. கலைகளில் ஆர்வமும், ஈடுபாடும் ஏற்படும். கவர்ச்சியான நடை, உடை, பாவனைகளும், வாக்குச் சாதுர்யமும் உண்டாக்கும். 

பெயர் எண் கூட்டுத்தொகை : 46

46ஐ பெயர் கூட்டு எண்ணாகக் கொண்டவர்கள் எத்தொழில் புரியினும் அத்தொழிலில் சிகரத்தை அடைவர். சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர்களும் அரசாளும் பதவிக்கு உயர வாய்ப்பு உண்டு. வயது ஏற, ஏற செல்வமும், அந்தஸ்தும் அதிகரிக்கும். இவர்களுடைய நடவடிக்கைகளில் நேர்மை இருக்க வேண்டியது அவசியம்.

 பெயர் எண் கூட்டுத்தொகை : 55

பெயர் கூட்டு எண் 55 ஆனால் ஒருவர் அறிவினால் பிரமிக்கச் செய்து எல்லோரையும் வெற்றி கொள்ளுவார். இவர்கள் அறிஞர்கள் என்று ஒப்புக்கொள்ளப்படுவர். மேதா விலாசம் உண்டாகும். அறிவு மின்னல்போல ஒளிவீசும். சரியான வழியில் பயன்படுத்தப்படாவிட்டால், இவர்களுடைய அறிவு இவர்களுக்கே எதிரியாகிவிடக்கூடும். 

 பெயர் எண் கூட்டுத்தொகை : 64

64 என்னும் எண் சம அளவில் நண்பர்களையும், எதிரிகளையும் உண்டு பண்ணக்கூடியது. வாழ்க்கையில் எதிர்ப்பு இருக்கும். அதிக மனவலிமையையும், சாமர்த்தியத்தையும், அறிவையும் தரும். செயற்கரிய செயல்கள் புரியச் செய்து கீர்த்தியை உண்டாக்கும். பெரிய அரசாங்கப் பதவிகள் தரும். அனைவரும் பிரமித்து வணங்கும் படியான பதவியையும் தரும். இந்த எண்காரர்களுக்கு வலிமைமிக்க வாக்கு உண்டாகும். 

பெயர் எண் கூட்டுத்தொகை : 73

பெயர் கூட்டு எண் 73 ஆனால் மனோசக்திகள் பலமடையும். புகழும், செல்வமும், அதிகாரமும் படிப்படியாக உயரும். சுக வாழ்க்கையே குறிக்கோளாக இருக்கும். ரகசியமாகக் காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் சமர்த்தர்களாக இருப்பர். அரசு ஆதரவு உண்டு. போகவஸ்துகள் நிறைய உண்டாகும். நேர்மை இல்லாவிட்டால் புகழ்மங்கும். தெய்வ பக்தியுடன் சுத்தமான இதயமும், மேன்மையான எண்ணங்களும் இருந்தால் சாந்தியுடன் பிரபுவாக வாழ்வர்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 82

82 என்னும் எண் சக்தி வாய்ந்தது. சாதாரண மனிதனையும் சக்ரவர்த்தி ஆக்கக்கூடியது. இந்த எண்ணுக்குரியவர்கள் கடுமையான உழைப்பாலும், கடமை தவறாத பண்பாலும் மேன்மை அடைவர். பெரும் புகழை அடைவர். காதலில் சிக்கல் ஏற்படும். பிடிவாதம் அதிகமாக இருக்கும். கண்களில் காந்த சக்தி உண்டாகும். 

பெயர் எண் கூட்டுத்தொகை : 91

91 என்றும் என் வைராக்கியத்தையும், அதிக சஞ்சாரத்தையும் குறிக்கிறது. இவர்கள் அதிகமாகப் பயணம் செய்வர். படகு மற்றும் கப்பல் மூலம் செய்யும் வியாபாரங்களால் பெரும் செல்வம் சேரும். சுகமான வாழ்க்கை அமையும்.

பெயர் எண் கூட்டுத்தொகை : 100

100 என்னும் எண் முயற்சிகளில் வெற்றியைத் தரக்கூடியது. ஆனால், வாழ்க்கையில் அதிக சந்தர்ப்பங்கள் ஏற்படாது. பணம் நிறைய இருக்கும். முக்கியமான சம்பவங்கள் இல்லாத நீண்ட சுக வாழ்க்கை அமையும்.


மேலும் Numerology பற்றிய தகவல்கள் அறிய கீழே உள்ள சுட்டியை பார்கவும்



Friday, June 13, 2014

தியானம்

தியானம்

        தியானம் ஒரு கிளர்சியுட்டும் அனுபவம் .அதுவரை அறிந்திராத ஒன்று குறித்த அனுபவம் .மனித மனம் மேற் கொள்ளும் மகத்தான அனுபவம் .தியானத்தில் அப்படியே இருக்கிறிர்கள் எதையும் செய்யாமல் செயலில்லை ,சிந்தனை இல்லை ,உணர்ச்சி இல்லை ,அது ஒரு முழுமையான உவகை நிலை .நீங்கள் எதையும் செய்யாமல் இருக்கும் போது இந்த உவகை எங்கே இருந்து வந்தது ?அது எங்கும் இன்றி வரலாம் ,எங்கு இருந்தும் வரலாம் .அது வினை முதலற்றது .மகிழ்ச்சியால் நிரம்பி இருப்பது .தியானத்தின் எந்த நிலையிலும் நீங்கள் உடல்சார்ந்த விதத்தில்லோ மனம் சார்ந்த விதத்தில்லோ எதையும் செய்வது இல்லை .எவ்வித நிகழ்வும் இன்றி அனைத்து செய்கையும் நின்றுவிட நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்.அது நீங்கள் செய்யக் கூடியதும் அல்ல .பயிற்சி பெறக் கூடியதும் அல்ல .அதன் இயல்பை அறிந்துக் கொள்ளுகிறிர்கள்.உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் எல்லா வேலைகளையும் விட்டு விட்டு இருக்கிற படியே  இருங்கள் ஆழ்ந்து சிந்திப்பதும் ,ஒரு முனைப் படுத்துவதும் ,எண்ணமிடுவதும் ஒரு வேலையே ! நீங்கள் எதையும் செய்யாமல் முற்றிலும் ஓய்வாக ஒரே ஒரு கணம் உங்கள் மையத்தில் இருக்க முடிந்தால் அது  தியானம் .அந்தத் திறமையை நீங்கள் பெற்ற பிறகு ,உங்களுக்கு விருப்பம் உள்ள வரை அதே நிலையில் தங்கி இருக்க முடியும் .நிறைவாக இருபத்தி நான்கு மணி நேரமமும் அதே நிலையில் உங்களால் இருக்க முடியும்.உங்களுடைய அமைதி குலையாமல் இருக்க முடிகிற போது, நீங்கள் நிதானமாய் செயல்படத் தொடங்கலாம் .உங்கள் இருப்பு நிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகைகள் கவனமாக இருங்கள் ,அதுவே தியானத்தின் இரண்டாவது பகுதி .முதலில் ஓய்வாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் ,அடுத்து தரையை சுத்தம் செய்வது ,நிரில் குளிப்பது போன்ற சின்ன சின்ன செயல்களை உணர்வுடன் கவனமாக செய்யுங்கள். பிறகு சிக்கலான செயல்களை உங்களால் எளிதாக செய்ய இயலும்.ஆகவே தியானம் செயலுக்கு மாறானது அல்ல .அது வாழ்வில் இருந்து விலகி செல்வதும் ஆகாது. ஒரு புதிய வாழ்க்கைமுறையை அது உங்களுக்குப் போதிக்கிறது. நீங்கள் சுழல்காற்றின் மையமாக இருக்கிறிகள்.தியானத்தின் முழுமையான ரகசியமே நீங்கள் எல்லாவற்றையும் சாட்சியாக பார்பதுதான் .செய்கை தன்னுடைய தளத்தில் தொடர்கிறது ,எவ்வித பிரச்னையும் இல்லாமல் மரத்தை வெட்டுவது ,கிணற்றில் நீர் இறைப்பது என்று தொடர்கிறது ,நீங்கள் சிறியதும் பெரியதுமாய் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் .ஆனால் மையத்தில் இருந்து மட்டும் வழி தவறிவிட வேண்டாம் . உங்கள் விழிப்புணர்வும் ,கவனித்தலும் (விருப்பு ,வெறுபற்ற) சிதைந்து விடாமல் அப்படியே இருக்க வேண்டும்.இருக்கும் இடத்தில் இருப்பது.நாம் நாமாக இருப்பது.முழுமையாக இருப்பது.மனவோட்டங்களை எண்ணங்களைக் கவனிப்பது.உணர்வுகளை உணர்ச்சிகளை கவனிப்பது.மனதைச் சுத்தப்படுத்துவது.இதன்மூலம் மனதிற்கு அப்பால் செல்வது.ஒவ்வொரு கணமும் பிரக்ஞையாக இருப்பது.இவ்வாறு இருக்க முடியுமானால் மேற்குறிப்பிட்டவை தாமாகவே நடைபெறும்.ஆனால் யதார்த்தத்தில் நாம் முழுநேரமும் பிரக்ஞையாக இல்லை.இதுவே நாம் அறியாதது.தியானம் என்பது ஒன்றைக் குறித்து கவனிப்பதோ (concentration)சிந்திப்பதோ (thinking) ஒன்றைப்பற்றி ஆராய்வதோ (contemplation) அல்ல.ஏனனில் இவற்றில் எல்லாம் மனம் தொடர்பு கொள்கிறது.தியானம் என்பது மனம் கடந்து செல்வது.மனதுக்கு அப்பால் செல்வது ஆகும்.

                             நம்மை அமைதியான நிலைக்கு அழைத்துச்செல்லாது. அமைதி நம்மில் நிலவுவதற்கான ஒரு சூழலை நிலைமையை நம்மிடம் உருவாக்கும். எப்பொழுதெல்லாம் அமைதி நிலவுகின்றதோ அப்பொழுதெல்லாம் நம் வாழ்க்கையில் சிரிப்பு நிகழ்கின்றது.கவலை கொள்ளமாட்டோம். மன அழுத்தம் வராது.நம்முள்ளே அமைதி நிலைமையை உருவாக்குவதற்கான தியான வழிமுறைகள் பலஉள்ளன. குறிப்பாக 118 அடிப்படை வழிமுறைகள் உள்ளன. இவற்றைஅடிப்படையாகக் கொண்டு இக் கால மனிதர்களுக்கு ஏற்றவகையில் ஓசோ பல தியான முறைகளை உருவாக்கி உள்ளார். இதில் மிகவும் பிரபல்யமானது. டைனமிக் (dynamic meditation) தியானமுறை. இது இதுவரை காலமும் பின்பற்றப்பட்ட மரபு நிலை தியான முறைகளிலிருந்து வித்தியாசமானது. நமக்குள் இருக்கும் சக்தியை வெளிக் கொண்டுவரச் செய்வது. டைனமைட், கற்களை வெடித்து சிதறடிப்பதுபோல், டைனமிக் தியானம், நம் கடந்த காலத்தை, நாம் அடக்கிய உணர்ச்சிகளை, நாம் அடக்கிய உணர்வுகளை வெடிக்கச் செய்து படைப்புச் சக்தியாக மாற்றுகின்றது.நமது வாழ்க்கை எந்தநேரமும் அவசரம் பயம் சந்தேகம் என பல அமைதியற்ற தன்மைகளைக் கொண்டது. இவற்றை எவ்வாறு அமைதியாக்குவது? கடந்த காலத்தில் நாம் விரும்பியது ஆனால்; பண்பாடு கலாசாரம் நாகரிகம் கருதி நாம் தவிர்த்தது அடக்கியது நம்மை விட்டுச் சென்று இருக்காது நமக்கே தெரியாமல் நமக்குள் இன்றும் வாழ்கின்றது. எந்த நேரமும் வெளியில் எட்டிப்பார்த்து நம்மை அலைக்கழிக்கும். இதை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது முதலில் நம் உடலில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.உடலை அமைதியாக இயல்பாக வைத்திருக்கப் பழகுவது. இதன் பின் மனதை அமைதியாக்குவது. நம் மிகப்பெரிய சவால் நம்முடன் இருந்து கொண்டே நம்மைக் கொல்லும் மனத்தை அமைதியாக்குவது தான். உடலைப் போல மனதை அவ்வளவு இலகுவாக அமைதியாக்க முடியாது. ஆனால்; உடலை அமைதியாகக்கப் பழக்கினோம் என்றால் மனதையும் வழிநடத்தலாம். மனம் அமைதி ஆக இருக்குமாயின் அப்பொழுது இதயத்திற்குச் செல்லலாம்.நம் உணர்வுகள் உணர்ச்சிகள் மனதை விட மேலும் சிக்கலானவை. ஆனால்; நம்பிக்கையுடன் இதயத்தை அணுகினால் இதையும் அமைதியாக்குவது சாத்தியம். இதன்பின் நம் மையத்திற்கு அதாவது உடல் மனம் இதயம் என்பவற்றுக்கு அப்பால் நம் இருத்தலின் மையத்திற்கு செல்லலாம். இங்கு அமைதியாக இருக்கலாம். இந்நிலையில் நம்மில் ஆனந்தம் பிறக்கும் பேரின்பம் கொள்வோம். என்கின்றனர் அனுபவித்த பலர்.கண்ணை மூடியவாறே மூக்கின் நுனியைக் கவனியுங்கள். மூச்சு உள்ளே வருவதையும் வெளியே செல்வதையும் கவனியுங்கள். இத் தியான முறை நம்மிடம் அமைதியை உருவாக்கின்றது. இம்முறை மூலமே கௌதம சித்தாத்தர் என்ற இளவரசர் புத்தர் நிலையை அடைந்தார். புத்தர் நிலை என்பது தன்னை கண்ட நிலை. உண்மையை உணர்ந்த நிலை அதாவது ஞானம் அடைந்த நிலை! அனைத்தும் அறிந்த நிலை.எதையும் துறக்காமல் உலகத்தை விட்டு காட்டுக்கு ஓடாமல் நாளாந்த வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே நாம் ஒவ்வொருவரும் புத்தர் என்பதை அறிய தினந்தோறும் தியானம் செய்வோம்.




Thursday, June 12, 2014

குளிகன் / மாந்தி - புலிப்பாணி



 மாந்தியை குளிகன் என்றும் அழைக்கபடுகிறது. சனிபகவானின் புத்திரன் என்றும் அழைக்கபடுகிறது. இது துணை கிரகமாக செயல்படுகிறது. பகலில் ஒரு குழந்தை பிறந்தால் குளிகன் என்றும் இரவில் ஒரு குழந்தை பிறந்தால் மாந்தி என்றும் சொல்ல படுகிறது

சனியின் மைந்தனும் மாந்தி என்றும் குளிகன் என்றும் கூறப்படும் கிரகமானது லக்கினத்தில் அமைந்தால் அச்சாதகனுக்கு நல்ல மனை வாய்த்தலும் நிறைதனமும், நிலம் முதலியன அமைதலோடு அவனது விதியும் தீர்க்கமானதாக அமையும் என்று கூறுக.

தனஸ்தானமான இரண்டாமிடத்தில் அமைய அவன் கலகன் எனவும் நேத்திர ஊனம் உறுவோன் என்றும் அதாவது கண்களில் ரோகம் பெறுபவன் என்றும், தனவிரயம் செய்வன் என்பது மட்டுமல்லாமல் தரணியில் துஷ்டன் எனவும் பெயர் வாங்குவன் என நீ துணிந்து கூறுவாயாக.

இக்குளிகன் திருதிய ஸ்தானத்தில் அதாவது மூன்றாமிடத்தில் அமையப் பெற்ற சாதகன் தன் தம்பியரோடும், நண்பர்களோடும் போர் செய்பவன் என்பதையும் நீ உணர்ந்து கூறுவதோடு இவன் வாய்ச் சமர்த்தன், நல்ல விரத ஒழுக்கமுள்ளவன் என்பதையும் உணருக.

குளிகன் நான்கில் அமையப் பெற்ற சாதகன் தன் பிறப்பிடத்தை விட்டு வேற்றிடம் சென்று, மலைப் பகுதிகளிலும் சில காலம் வாழ்ந்திருப்பன். அதனால் குற்ற மொன்றுமில்லை

இலக்கனத்திற்கு ஐந்தாம் இடத்தில் சனியின் குமாரனான குளிகனானவன் நிற்கப்பிறந்தவன் குணவானாக வாழ்வான் எனினும் புத்திர தோடம் உடையவனேயாவான். மிகச் சிறந்த வீரனாக இவன் விளங்குவதோடு பகையை ஒழித்தழிக்கும் பாங்கறிந்தவன்; திடமாக வாழ்பவன். வெகுதன தான்ய சம்பத்துடைவன்,

இக்குளிகன் ஆறாமிடத்தில் நிற்கப் பிறந்தவன் நிறைந்த ஆயுள் உள்ளோன். பரோபகாரி, இவனும் வீரனே என்பதனை நன்கு கிரக பலம் அறிந்து கூறுவாயாக.

இலக்கினத்திற்கு ஏழாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகனுக்குக் கண்டம் நேரும். இவனுக்கு விவாதத்தாலே வெகுதன விரயம் சிவனருளாலே சித்திக்கும்.

எட்டாமிடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் மகா அழும்பன் என்பதோடு நீரால் கண்டம் ஏற்படும் என்பதையும், அறிவித்துக் கொள்ளலாம்.

இலக்கினத்திற்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த ஜாதகன் முகவசியமுடையவன் என்றாலும் அழும்பனாய் பிதுர் துரோகியாய் விளங்குவான். எனினும் இப்பூமியின் கண் நிறை தனம் பெற்று மகிழ்வோனே யாவான். அதனால் குற்றமில்லை எனக் கூறுக.

பத்தாம் இடமான கர்ம ஸ்தானத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் கருமியாகவும், துரோகம் செய்பவனாகவும் இருப்பான். கிரக நிலையை நன்கு ஆய்ந்தறிந்து தீட்டு நிகழ்ந்த வீட்டில் உஞ்சை விருத்தி ஜீவனம் செய்பவனாக இருப்பன். கிரக பலம் அறிந்து சிறப்பாகவும் திண்ணமாகவும் பலன் கூறுக.

இலக்கினத்திற்கு பதினொன்றாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்த சாதகன் பூமியில் நல்ல புகழ் உடையவனேயாவான். சிறந்த தனலாபம் உடையவனே. இவனது ஆயுள் பலத்தை அறிந்து கிரக நிலைமை தெரிந்து நீ சொல்லுக. இவன் வசியன் [தேவதை வசியன்] ஜாலக்காரன்.

பன்னிரண்டாம் இடத்தில் குளிகன் நிற்கப் பிறந்தவன் வீண்விரயம் செய்பவன். ரசவாதம் தேர்ந்தவன். குடும்ப நாசம் செய்பவன்.



மாந்தி புராணகதை


இராவணன் மகன் மேகநாதன் (எ) இந்திரஜித் பிறந்த நேரத்திலேயே மாந்தி அவதரித்தார். சர்வ வல்லமையும், அரிய அற்புதமான வரங்களையும் பெற்ற இந்திரஜித் தின் இறப்பின் பொருட்டே, அவன் பிறக்கும்போதே பிறந்தவர்தான் மாந்தி
.
ராமாயணத்தில் ஒரு கிளைக் கதையில், மாந்தியைப் பற்றிய செய்தி உள்ளது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். படித்தவர்கள் அறியத்தரலாம். தன் தவவலிமையால் சிவனிடம் வரம் பெற்ற ராவணன், கிரகங்களையே தன்னிடத்திற்கு அழைக்கும் பேறுபெற்று விளங்கினானாம். தன் மகன் இந்திரஜித் பிறக்க இருந்த சமயத்தில், சனியை வரவழைத்த ராவணன். என்னுடைய மகனின் ஜாதகத்தில் நீ பதினொன்றாம் இடத்தில்தான் இருக்க வேண்டும் என்று பணித்தானாம். ஜாதகத்தில், சனிக்கு 11ஆம் வீடு சிறந்த இடம். 12ஆம் வீடுதான் மோசமான இடம். வேறு வழியில்லாமல் சரி என்று ஒப்புக்கொண்ட சனி, அலட்சியத்தாலும், தவறுதலாலும், கவனக்குறைவாலும், அப்படி 11ல் நிற்கும் போது, சனியின் ஒரு கால் 12ஆம் வீட்டின் மேல் இருந்ததாம். கோபமுற்ற ராவணன், தன் நீண்ட வாளால், சனியின் அந்தக் காலை வெட்டிவீழ்த்த, அது ஒன்றாம் வீட்டில் போய் விழுந்ததாம். விழுந்த அந்தக் காலும், அதனுடன் இருந்த சதைப் பகுதியும் சேர்ந்துதான் மாந்தியாக உருவெடுத்ததாம். அதோடு லக்கினத்தில் உயிர் பெற்று எழுந்ததால், ராவணனின் மகன் இந்திரஜித்தின் வாழ்க்கையை, அற்ப ஆயுளிலேயே முடித்ததாம்.

ஸ்ரீசனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும். 



மாந்தி /  குளிகன்  சேர்க்கை பலன்கள்

ஸ்ரீசனீஸ்வரரைப்போல் வல்லமை பெற்றவர்தான் மாந்தி. சனிக்கு நிகரானவர் எனலாம். அதனால் ஜாதகத்தில் மாந்தியின் பலன்களையும் நிர்ணயித்து அறிய வேண்டும். மாந்தி கடிகாரச் சுற்று முறையில் வலம் வரும் கிரகமாகும்.

மகரம், கும்பம் ஆகிய ராசிகளை ஆட்சி வீடாகப் பெற்ற ஸ்ரீசனீஸ்வரரிடமிருந்து கும்ப ராசியை ஆட்சி வீடாகப் பெற்றவர்தான் மாந்தி. இவருக்கு உச்ச வீடு, நீச வீடு இல்லை. மாந்தி தான் அமர்ந்திருக்கும் இடத்தி-ருந்து 2, 7, 12 ஆகிய இல்லங்களைப் பார்ப்பார் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது.

லக்னத்திற்கு 6, 8, 12-ல் சந்திரன் அமர்ந்து ஆவியுலகத் தலைவன் மாந்தி சேர்க்கை பெற்றால், ஜாதகர் துர்ஆவிகüனால் பீடிக்கப்பட்டு மரண வேதனை அடைவார். ஸ்ரீஆஞ்சனேயரை வழிபட்டால் துர்ஆவிகள் விலகும். மாந்தியினால் ஏற்பட்ட தோஷம் விலகும்.

மாந்திக்கு 7-ல் புதன் அமர்ந்து சுபர்களால் பார்க்கப்பட்டால், ஜாதகர் தந்தை செய்த தொழில் மூலம் நிரம்ப வருமானம் பெற்று எல்லா ஐஸ்வர்யங்களுட னும் வாழ்வார்.

ஆண் ஜாதகருக்கு, மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்தால், ஜாதகரின் சகோதரர் தீய பழக்கங்கள் மிகுந்தவராவார். குலப்பெருமை கெடும். அரச தண்டனைக்கு உள்ளாவார்.

பெண் ஜாதகத்தில், மாந்திக்கு 3-ல் சனி அமர்ந்து ஜென்ம நட்சத்திரம் ரோகிணி என்றால், ஜாதகிக்கு இல்லற வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியிராது. வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டமாக இருக்கும். பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் துரதிர்ஷ்டமா கும். தோஷம் மிகுதி.

மாந்திக்கு 5-ல் ராகு அல்லது சனி இருந்தால், ஜாதகர் ஆண்மையில்லாதவரா வார். பெண் ஜாதகம் என்றால் பிரசவத்தில் துன்பம் ஏற்படும். பெண் ஜாதகத்தில் செவ்வாய், சூரியனோடு மாந்தி சேர்க்கை பெற்றால் நெறியற்ற வாழ்க்கை வாழ்வாள்.

லக்னத்திற்கு 5, 9-ஆம் இடங்கள் கன்னி, மிதுனம், மகரம், கும்பம் போன்ற ராசிகüல் ஒன்றாக அமைந்து, சனி- மாந்தி சேர்க்கையோ, பார்வையோ 5, 9-ஆம் இடங்களுக்கு ஏற்பட்டால் ஜாதகி மலடியாவாள்.

லக்னத்திற்கு 3-ல் சனி உச்சம் பெற்று மாந்தியின் சேர்க்கை பெற்று சுக்கிரன் பார்த்தால், ஜாதகர் பெண் பித்தனாவான். பெண் நோயால் அவதியுறுவான்.

லக்னத்திற்கு 4-ல் கேதுவும் மாந்தியும் சேர்க்கை பெற்றால் மிகுந்த துரதிர்ஷ்ட மாகும். வாழ்க்கையில் எல்லா விஷயங்கü லும் அதிருப்தி காணப்படும். ஒரு இடத்திலும் நிலையாக வாழ முடியாது. நாடோடி போல் வாழ்க்கை அமையும். தாய்க்கும் தோஷமாகும்.

பெண்ணின் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 4-ல் மாந்தி நின்றால் புத்திரதோஷம் மிகுதி. கணவன் நோயாü ஆவான். 4-ல் உள்ள மாந்தியுடன் சனி சேர்க்கை பெற்றாலோ பார்த்தாலோ ஜாதகி மிகுந்த துரதிர்ஷ்டசா-. லக்னத்திற்கு 2, 8-ல் சர்ப்ப கிரகங்கள் அமையப் பெற்று மாந்தி சேர்க்கை பெற்றால், நாக தோஷத்தால் மாங்கல்ய தோஷமாகும்.


குளிகை காலம் பலன்கள்

மாந்திக்கு
 குளிகன்  என்ற சிறப்பு பெயர் உண்டு. பொதுவாக குளிகன்  காலம் நல்ல காலம்- சுபகாலம் என நூல்கüல் கூறப்பட்டுள்ளது. சனியின் மைந்தனாகிய மாந்தி ஒவ்வொரு நாலும் தான் ஆட்சி செய்யும் குளிகன்  காலத்தில் செய்யப்படும் சுபகாரியங்களை- மகிழ்ச்சிக்குரிய காரியங்களை மேன்மேலும் பன்மடங்கு அபிவிருத்தி செய்து நம்மை மகிழச் செய்வார்.

அதேபோல் நமக்குத் துன்பம் தரக்கூடியக் காரியங்களை குளிகன்  காலத்தில் செய்தால் அவை பன்மடங்கு அபிவிருத்தியாகி துன்பங்கள் எல்லையில்லாமல் காணப்படும்.

பொதுவாக ஒரு மனிதர் இறந்துவிட்டால் பிரேதத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்ல குளிகன் காலம் தவிர்த்துதான் எடுத்துச் செல்வார்கள் என்பது அனைவரும் அறிய வேண்டும்