ஓம் சரவணபவ

ஓம் சரவணபவ

Followers of the blog

Monday, July 29, 2013

மச்ச சாஸ்திரம்– அரிய தகவல்கள்






அறிவியல் அறிஞர்கள், இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று
மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள். ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும்.

மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும்.

சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது.

மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும்.

நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம், கடத்தப்படுதல், தீரா நோய், கோர மரணம், ஊரை விட்டு ஒதுக்கப்படுவது, உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும்.

ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல், குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ஈடுபடுவார்கள். மனசாட்சிக்கு அப்பார்பட்ட செயல்களை செய்வார்கள்.

குரு மேட்டில் மச்சம் இருந்தால் பெரிய பதவிகளில் இருப்பார்கள், திடீரென தூக்கி எறியப்படுவார்கள்.

சுண்டு விரலுக்குக் கீழே இருப்பது புதன் மேடு.
அதற்குக் கீழே இருப்பது செவ்வாய் மேடு. செவ்வாய் மேட்டில், உள் செவ்வாய்
மேடு, வெளிச் செவ்வாய் மேடு என்று இரண்டு வகைப்படும்.

உள்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி இருந்தால் திடீர் யோகம் உண்டாகும். ஆனால் அதனை அனுபவிக்க துணைவியர் இல்லை என்று புலம்ப வைக்கும்.

வெளிச் செவ்வாயில் கரும்புள்ளி இருந்தால் அரசு
வழியிலோ அல்லது வழக்குகளிலோ நமது சொத்துகள் பறிபோகும். அதாவது சாலை அமைக்க
நிலத்தை அரசு எடுத்துக் கொள்ளுதல், வழக்கில் எதிராளிக்குச் சாதகமாக
தீர்ப்பு அமைந்து சொத்து கைவிட்டுப் போதல் போன்றவை ஏற்படும்.

கட்டை விரலுக்குக் கீழே இருக்கும் மேடு
சுக்கிரன் மேடு. ரொம்ப முக்கியமான மேடு. சுக்கிர மேட்டில் மெல்லிய கோடுகள்
இருந்தால் ரொம்ப நன்றாக இருக்கும். புள்ளிகள் இல்லாமல் இருப்பதுதான்
நல்லது.

புள்ளி இருந்தால் அது ஒழுக்கக் கேடு. பலருடன்
செல்வது, பல பெண்களிடம் செல்வது போன்றவை ஏற்படும். உடலுறவில் பல்வேறு தவறான
உணர்ச்சிகளைக் கொண்டிருப்பார்கள்.

சுக்கிரன் மேட்டிற்கும், வெளிச் செவ்வாய்
மேட்டிற்கும் கீழே நடுவே இருப்பது சந்திரன் மேடு. அதாவது உள்ளங்கையின்
சுண்டு விரலுக்குக் கீழே கடைசியான மூலைப் பகுதிதான் சந்திரன் மேடு.

சந்திரன் மேட்டில் புள்ளிகள் இருந்தால் மனநலம் குன்றியக் குழந்தைகள், நரம்புக் கோளாறு போன்றவை ஏற்படும்.

கரும்புள்ளிகள் அவ்வப்போது ஏற்படுமா?
ஆம். சிலருக்கு பிறக்கும்போதே மச்சங்கள் ஏற்படுவதில்லை. புள்ளிகள் இயற்கையின் விதிமுறைகளை முன்கூட்டியே எடுத்துக் கூறுவதாகும்.

இங்கு வந்தால் இது நடக்கும், இங்கு மச்சம் வந்தால் இந்த யோகம் கிட்டும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.

சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும்.
சிலருக்கு ஒரு சில காலக்கட்டத்தில் மச்சம் தோன்றும். சனி, ராகு
சேர்ந்திருந்து, சனி திசையில் ராகு புத்தி வந்தால் கரும் புள்ளிகள்
தோன்றும்.

அதை நாம் தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் சிலதை கூட்டி, சிலதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

உடலின் பிறப்பகுதியைக் காட்டிலும்
உள்ளங்கையில் ஏற்படக் கூடிய கரும்புள்ளிகள் பொரும்பாலும் வாழ்க்கையில்
பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

கருப்பு புள்ளிகள் முதலில் கருப்பாகத் தோன்றாது. பழுப்பு நிறுத்தில்தான் தோன்றும். அப்போது அது நல்ல பலன்களைத் தரும்.

அதேப்போல உள்ளங்கையில் இருக்கும் வெண்
புள்ளிகள் அதிக பணப் புழக்கம், அறிவுக் கூர்மை, எதையும் திட்டமிட்டுச்
செய்யும் திறனைத் தெளிவுப்படுத்தும்.

பழுப்பு, வெண் புள்ளிகள் மற்றும் ஆரஞ்சு
நிறத்தில் தோன்றும் புள்ளிகள் நல்லது. ஆரஞ்சு புள்ளிகளால் திடீர் சொத்து
வாங்குவது போன்றவை ஏற்படும்.

சிவப்பாக இருப்பவர்களின் கைகளில்தான் ஆரஞ்சு
நிற புள்ளிகள் தெரியும். நமக்கு இருந்தாலும் அது பழுப்பு நிறத்திற்கும்
ஆரஞ்சுக்கும் வித்தியாசம் தெரியாததால் கண்டுபிடிக்க முடியாது.

கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?
ஆம்,
மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்களுக்கு இடது கையில் இருக்கும்
மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும்
மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.

முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப்பது
நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம்,
இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.

நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனால் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம்.

சிலருக்கு கருப்பையும், பச்சையையும் கலந்த
மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற
மச்சங்கள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.

என் தாத்தா சில ஜாதகங்களைப் பார்த்ததும் இந்த
பெண்ணுக்கு நாக தோஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர்கள் இல்லையே, எந்த
தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில்
இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதியில் பச்சையும், கருப்பும் கலந்த
நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று
சொல்வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.

லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திரனுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ இதெல்லாம் ஏற்படும்.

பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு,
கேதுதான் மச்சங்களை வெளிப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை
சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.

செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து
சனியின் பார்வை பெற்றாலே உடல் எங்கும் மச்சமாக - அகோரமாக காட்சி
அளிப்பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில்
வகிப்பவருக்கு அதுபோன்ற நிலை உள்ளது.

பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லாமல்
இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது,
விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.

வாழ வந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம்
இருப்பது அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்களுக்கு
வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.

அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இருந்தால்
கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல்லலாம். பொதுவாக பின்புறம்
இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்கள்
என்று சொல்வார்கள்.

பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்களுக்கு
காலில் சக்கரம் என்று சொல்வார்கள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை
ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின்
காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ளங்காலில் இருக்கும் மச்சம் ஒரு
அசைவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லாம் உண்மையா?

உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு,
கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின்
வடிவம் வேறுபடும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர்த்தம் உண்டு.

மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் விசேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.

மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போதெல்லாம் அது அரிதாகிவிட்டது.

நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இதுபோன்ற மச்சங்கள் கொண்டிருப்பர்.

மச்ச சாஸ்திரம் சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம்
பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம்
செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை
இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர,
சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட
சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல
சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக
விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம்.

நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில்
பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும்
சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம்.
சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும்.
நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும்.
பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும்
அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக
குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே
நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு
யோகங்கள் தரவல்லது.

ஆண்களுக்கான மச்ச பலன்




· இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.


· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.


· வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.


· வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.


· வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.


· வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.


· இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.


· இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை
சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை
சம்பவத்தை சந்திப்பார்.


· இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.


· இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.


· இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.


· இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு
தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில்
அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.


· மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.


· மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.


· மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.


· மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள்,
சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.


· மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.


· நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.


· மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.


· மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.


· மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.


· மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.


· வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும்.
உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன்
மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.


· இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.


· வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.


· இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.


· இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை
வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.


· தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.


· கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.


· கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.


· இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.


· வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.


· மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும்
குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும்
இருப்பார்.


· வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.


· வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.


· வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.


· தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.




· வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.




· வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.




· இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்




· முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.




· முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.




· முதுகின்
இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை
பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும்
மனநிலை அவருக்கு இருக்கும்.



புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்

நெற்றியின் வலது புறம் & தனயோகம்

வலது புருவம் & மனைவியால் யோகம்

வலது பொட்டு (நெற்றி) & திடீர் அதிர்ஷ்டம்

வலது கண் & நண்பர்களால் உயர்வு

வலது கண் வெண்படலம் & புகழ், ஆன்மீக நாட்டம்

இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செலவாளி

மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை

மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடையும் அம்சம்

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை

மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்

மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம்

வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்

இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு

வலது காது நுனி & சில கண்டங்கள் வரலாம்

இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவமானம்

காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்

தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்

கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை

இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார்

வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்

வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை

அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு

பெண்களுக்கான மச்ச பலன்


ஒரு பெண்ணின் நெற்றியில்
குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர்
பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு
வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம்
இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை
மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத
குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம்
இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம்
கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின்
சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.

மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம்
உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும்
அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை
கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்
தலையில் எங்கு மச்சம்
இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும்.
வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

ஆடம்பர வாழ்வு
நெற்றியின் நடுவில்
மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு
கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம்
இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால்
வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.

கன்னத்தில் மச்சம்
காதுக்கும்,
கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால்
வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே
வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம்
இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக்
காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால்
பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.
அந்தஸ்து
மூக்கு மீது மச்சம்
இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர
வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம்
இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத்
தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.

மார்பில் மச்சம்
பெண்ணின் இடதுபக்க
மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக
முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம்
இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில்
போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்
கண்களுக்குத்
தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப்
பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில்
ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை,
மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக
இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை
இடதுதொடையில் மச்சம்
இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள்.
வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும்
இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம்
இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும்
இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.

ஆதாரம்: சாமுத்ரிகா லட்சணம் நூல்.

நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து

நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு

நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி

மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமைசாலி

மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்

மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்

மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்

மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்

இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு

வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை

வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்


நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்

இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்

தலை & பேராசை, பொறாமை குணம்

தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை

தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்

தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்

வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை

அடிவயிறு & ராஜயோக அம்சம், உயர்பதவிகள்

இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்

வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை

புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை



  1. இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
  2. நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
  3. வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
  4. வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
  5. வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
  6. வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
  7. இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
  8. இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர்
    வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு
    வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
  9. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
  10. இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
  11. இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
  12. இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை
    ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின்
    பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
  13. மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
  14. மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
  15. மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக
    இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
  16. மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக
    இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம்
    மிகுந்திருக்கும்.
  17. மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
  18. நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
  19. மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
  20. மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
  21. மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
  22. மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
  23. வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி
    இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த
    முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
  24. இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.



Tuesday, July 23, 2013

ஜோதிட கேள்வி பதில் (1-16)

1 கடன் தொல்லை தீர என்ன வழி?

கடன் ஏற்பட காரணம் பொதுவாக ஜாதக கட்டத்தில் கிரக சேர்க்கை காரணமாக கடன் ஏற்படும். தனகாரகன் குரு, தனஸ்தான கிரகம் பலம் குறைந்து நீச்சம் பெற்று 6, 8, 12ல் மறைந்தால் பொருளாதார பிரச்னைகள் இருக்கும். ஆனாலும் அந்தந்த காலகட்டங்களில் வரும் திசா புக்திகள்தான் கடன் சுமை பிரச்னை அதிகமாவதற்கு காரணம். ஆறாம் அதிபதியுடன் சேரும் கிரகங்கள் மூலம் கடன் பிரச்னைகள் ஏற்படும். ஆறாம் அதிபதியுடன் இரண்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் குடும்ப செலவு, சுப விஷயத்துக்காக கடன் வாங்க நேரிடும். மூன்றாம் அதிபதி சம்பந்தப்பட்டால் சகோதரர்களால் பணவிரயம் ஏற்படும். நான்காம் அதிபதி சம்பந்தப்பட்டால் நிலம், விவசாயம், உடல்நலக் குறைவு, தாய் மூலம் பணம் செலவாகும். ஐந்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் கல்யாணம், கல்வி வகையில் கடன் ஏற்படும். ஏழாம் அதிபதி சம்பந்தப்பட்டால், மனைவி, நண்பர்கள் மூலம் செலவுகள் இருக்கும். எட்டாம் அதிபதி சம்பந்தப்பட்டால் வீண் செலவுகள் வரலாம். அதே நேரத்தில் திடீர் யோகத்துக்கும் இடமுண்டு. ஒன்பதாம் அதிபதி சம்பந்தப்பட்டால் பூர்வீகச் சொத்துக்களை விற்க நேரிடும். தந்தையால் செலவுகள் இருக்கும். பத்தாம் அதிபதி சம்பந்தப்பட்டால் தொழில், வியாபாரம் மூலம் கடன் ஏற்படும்.

கடன் தீர பரிகாரம்

கடன் தீர சாஸ்திரத்தில் சில பரிகாரங்கள் சொல்லப்பட்டுள்ளது. அஸ்வினி அல்லது அனுஷம் நட்சத்திரம் உள்ள நாளில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் சுமை படிப்படியாக குறையும். செவ்வாய்க்கிழமை  செவ்வாய் ஓரையில் கடனை திருப்பித் தரலாம். ஞாயிற்றுக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், சனிக்கிழமையுடன் கூடிய சதுர்த்தி திதியிலும், செவ்வாய்க்கிழமையுடன் கூடிய நவமி திதியிலும் குளிகை நேரத்தில் அசல் தொகையில் ஒரு பகுதியை கொடுத்தால் கடன் அடைபடும். தினசரி பக்தியுடனும் நம்பிக்கையுடனும் கந்த சஷ்டி கவசம் படித்து வந்தால்  பணப்பிரச்னைகள் காற்றில் பறக்கும்.  சஷ்டி திதியன்று முருகன் ஸ்தலங்களில் தொடர்ந்து கவசம் படிக்க கடன், வியாதி, சத்ரு பயம் விலகி ஓடும். தினசரி சரவணபவ என்று 108 முறை எழுதி வரலாம். ஓம்ஸ்ரீம் கம்ஸௌம்யாய கணபதியே வரவரத சர்வ ஜனம்மே வசமானய் ஸ்வாஹா.. ஹிருதயாதி ந்யாஸ நிக்விமோக... இந்த மந்திரத்தை தினசரி 108 முறையோ அல்லது அதற்கு மேலோ நம்பிக்கை, சிரத்தையுடன் மனதுக்குள் ஜெபித்து வந்தால் ருணதோஷம் நீங்கும்.  



2 அரசு உத்தியோகம் பெறும் ஜாதக அமைப்புகள் எப்படி இருக்கும்?  

ஜோதிடத்தைப் பொறுத்தவரை 10ஆம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் 10ஆம் இடத்தின் அதிபதி 10இல் இருந்தால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
அதேபோல் 10 இடத்து அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தாலும், சூரியனின் நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தாலும் அரசு உத்யோகம் பெறலாம். அதற்கடுத்தபடியாக 10ஆம் இடத்தில் குரு இருந்தால், மரியாதை தரும் அரசு பதவிகள் கிடைக்கும்.
ஆனால் முக்கியமாக லக்னாதிபதி நன்றாக அமைந்தால்தான், அரசு உத்தியோகம் கூட தடையின்றி அமையும் வாய்ப்பு கிடைக்கும். இதேபோல் லக்னாதிபதியை விட 3ஆம் இடத்து அதிபதி நன்றாக அமைந்திருந்தால் அவர் சொந்தத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார். 
மேலும், 3ஆம் இடத்து அதிபதியும், 10ஆம் இடத்து அதிபதியும் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர் சிறிது காலம் அரசு பணியில் இருந்து விட்டு, அதன் பின்னர் அதிலிருந்து விலகி அரசு சம்பந்தமான தொழில்களை (கான்ட்ராக்ட்) நடத்தி பொருள் ஈட்டுவார்.
ஒரு சிலருக்கு மேற்கூறிய பலன்கள் அவர்களின் ஜாதகத்தில் காணப்பட்டாலும், அவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்காது. இதற்கு காரணம் சூரியனுக்கு எதிரான கிரகங்களின் தசா புக்தியே அவருக்கு நடந்து கொண்டிருக்கும்.
மேலும் சில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். எனவே மேற்கூறிய அனைத்து அம்சங்களையும் முழுமையாக அலசி ஆராய்ந்த பிறகே ஒருவருக்கு அரசு உத்தியோகம் கிடைக்குமா என்பதைப் பற்றிக் கூற முடியும்.



கணினி துறையில் சாதிக்கும் ஜாதக அமைப்பு யாருக்கெல்லாம் உண்டு?  


கணினி துறைக்கு உரிய கிரகம் சனி. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் சிறப்பாக இருந்தால் அவர் கணினித் துறையில் சாதிப்பார் என்று கொள்ளலாம்.
அதற்கடுத்தபடியாக சனியின் நட்பு கிரகங்களான சுக்கிரனும், புதனும் வலுவடைந்து இருந்தால் கணினித் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை பார்க்கலாம். குறிப்பாக 10ஆம் இடம் (உத்யோக ஸ்தானம்); 3வது இடத்தில் (முயற்சி ஸ்தானம்) ஆகியவற்றில் சனி, சுக்கிரன், புதன் இருந்தால் அல்லது 10ஆம் வீட்டிற்கு உரிய கிரகத்துடன் சுக்கிரன், சனி, புதன் நல்ல விதத்தில் தொடர்பு பெற்றிருந்தாலோ அவர்கள் கணினித் துறையில் சாதனை படைப்பர்.
இத்துடன், மின்னணு துறைக்கு உரிய கிரகமான ராகுவும் அவரது ஜாதகத்தில் சுபத்தன்மை பெற்றிருந்தால் கணினித் துறையில் அவர் நம்பர்-1 ஆக விளங்குவார். 
 


4 எதிர்காலத்தை அறியும் சக்தி படைத்தவர்களின் கைரேகை பற்றிக் கூறுங்கள்?   


சில குறிப்பிட்ட கைரேகை அமைப்பைப் பெற்றவர்கள் எதிர்காலத்தை கணிக்கும் சக்தி படைத்தவர்களாகத் திகழ்வார்கள் என சில கைரேகை தொடர்பான நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பற்றி விளக்குங்கள்?
பதில்: எதிர்காலத்தை அறியக் கூடியவர்களின் கையில் சாலமன் ரேகை (அல்லது) சக்தி ரேகை இருக்கும் என கைரேகை அறிஞர்கள் கூறியுள்ளனர். ஆள் காட்டி விரல் குரு பகவானுக்கு உரியது. அந்த விரலுக்கு கீழ் உள்ள மேடு “குரு மேடு” என்று அழைக்கப்படுகிறது. 
குரு மேட்டில் நேர் ரேகைகள் (ஒன்றுக்கு மேற்பட்ட) இருந்தாலோ, முக்கோணக் குறியீடு இருந்தாலோ, நட்சத்திரக் குறியீடு இருந்தாலோ அவர்கள் முக்காலத்தையும் உணரக் கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள் என கைரேகை சாஸ்திரம் கூறுகிறது. 
 


5 தரமான கல்வி கிடைப்பதற்கும், ஜாதக அமைப்பிற்கும் தொடர்புள்ளதா?  


ஒரு சிலர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும், மிகவும் கஷ்டப்பட்டு மேற்படிப்பை முடித்து விடுகின்றனர். ஆனால் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தாலும் சிலர் 5ஆம் வகுப்பைக் கூட தாண்டாமல் பள்ளியை விட்டு வெளியேறி விடுகின்றனர். தரமான கல்வி கிடைப்பதற்கு ஏதாவது ஒரு வகையில் ஜாதக அமைப்பு காரணமாகிறதா?
பதில்: ஒருவரது ஜாதகத்தில் வாக்கு ஸ்தானம் (2ஆம் இடம்) நன்றாக இருந்தால் ஏழ்மை நிலையிலும் அவருக்கு தரமான கல்வி கிடைக்கும். இதனை அனுபவ ரீதியாக பலர் தங்கள் வாழ்க்கையில் பார்த்திருக்க முடியும். உதாரணமாக, ஏழ்மை நிலையில் உள்ள மாணவனின் கல்வி தடைபடாமல் தொடர, அவனது வகுப்பு ஆசிரியரே கல்விக்கான செலவுகளை ஏற்றுக் கொள்வார். 
ஜோதிடத்தைப் பொறுத்தவரை 2ஆம் இடம் வாக்கு ஸ்தானத்தை மட்டுமின்றி ஆரம்பக் கல்வியையும் குறிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 4ஆம் இடம் உயர் கல்வியையும், 9ஆம் இடம் மேல்நிலைக் கல்வியையும் (கல்லூரி, பல்கலைக்கழகம்) குறிக்கிறது.
இதுமட்டுமின்றி 5ஆம் இடம்தான் மனதைக் குறிக்கிறது. படிக்கும் பாடங்களை ஒருவர் நன்றாக மனதில் பதியவைத்துக் கொள்வதற்கு உதவுவது இந்த 5ஆம் இடம். ஒருவருக்கு 5ஆம் இடம் சிறப்பாக இருந்தால்தான் கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். நினைவாற்றல் நன்றாக இருக்கும். தேர்விலும் அதிக மதிப்பெண் பெற முடியும். 
படிக்கும் காலத்தில் ராகு தசை, ஏழரைச் சனி, அஷ்டமச் சனி வந்தால் அந்த மாணவர், மாணவியின் வாழ்வில் சூறாவளி வீசத் துவங்கிவிடும். எனவே, பெற்றோர் தங்களின் வாரிசுக்கு ராகு தசை நடக்கும் காலத்தில் அவர்கள் மீது படிப்பைத் திணிக்காமல், அவர்களின் பிரச்சனைகளை, இடையூறுகளைப் புரிந்து கொண்டு கல்வி புகட்ட வேண்டும். சில மாணவ, மாணவிகளுக்கு பாலியல் சித்ரவதைகள் கூட ஏற்படலாம். 
ஒருவருக்கு தரமான கல்வி கிடைப்பதை சாதாரண விடயமாக கருதக் கூடாது. அதற்கு கிரகங்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். பிறக்கும் போது உள்ள கிரக அமைப்பு, தற்கால் கிரக நிலைகள் ஆகிய இரண்டும் சிறப்பாக இருந்தால் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவராகத் திகழ முடியும்.

 

6 மாணவர்களின் கல்வி கற்கும் அணுகுமுறையில் கிரகங்களின் தாக்கம் இருக்கிறதா?   


சிறு வயது முதலே கற்பூரம் போன்ற புத்தியுடன் காணப்படும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆனால், ஒரு சில மாணவர்கள் சிறுவயதில் நன்றாக படிக்காத போதும், குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் புரிந்து கொண்டு பயிலும் ஆற்றலைப் பெற்று மேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்பில் முத்திரை பதிக்கின்றனர். இந்த இரு தரப்பு மாணவர்களையும் ஜோதிட ரீதியாக அணுகுவது எப்படி?
பதில்: புகழ்பெற்ற கல்லூரியில் துறைத் தலைவராகப் பணியாற்றும் பெண்மணி சமீபத்தில் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு 2 மகன்கள். அதில் மூத்த மகனின் ஜாதகத்தைப் பார்த்ததில் அவர் புத்தகப் புழுவாக இருப்பார் என்பது தெரியவந்தது. இளைய மகனின் ஜாதகத்தைப் பார்த்ததில் (மோசமான தசா புக்தி நடந்து கொண்டிருந்தது) அவர் தேர்வுத் தேதி அறிவித்த பின்னரே புத்தகத்தை கையில் எடுக்கும் ரகம் எனத் தெரிந்து கொண்டேன். 
பின்னர் அந்தப் பெண்மணியிடம் பேசிய நான், உங்கள் இளைய மகனைக் காட்டிலும், மூத்த மகன் சற்று அதிகம் படிப்பது போல் தோன்றினாலும், இளைய மகனுக்கு உள்ள அறிவாற்றல் (ஐ.கியூ) மூத்த மகனுக்கு இருக்காது என்றேன். ஆனால் அதனை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார். இளைய மகனை விட மூத்த மகன் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார் என்பதே அவர் கூறிய காரணம்.
அறிவாற்றலையும், கல்வி பயிலுவதையும் ஒன்றாகப் பார்க்கும் மனோபாவத்தை பெற்றோர் தவிர்க்க வேண்டும். உளவியலாளர்கள், கல்வியாளர்களைப் பொறுத்தவரை, மீத்திரக் குழந்தைகள் (Gifted Childrens) என்று ஒரு சில குழந்தைகளைக் குறிப்பிடுகின்றனர். 
ஆசிரியர், புத்தகம், கைடு ஆகியவற்றின் துணையுடன் பாடத்தை புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்களே மீத்திரக் குழந்தைகள். ஆனால் இவர்கள் எல்லோருக்கும் அறிவாற்றல் அளவு அதிகமாக இருக்காது. ஒரு சிலருக்கு வேண்டுமானால் இருக்கலாம்.
பொதுவாக ஐ.கியூ அதிகமுள்ள குழந்தைகள் பாடத்தில் முழுமையாக கவனம் செலுத்த மாட்டார்கள். ஆசிரியர்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பதில் கேள்வி எழுப்புவர்.
லக்னாதிபதி லக்னத்தில் இருந்து, வாக்கு அதிபதி வாக்கு ஸ்தானத்தில் இருப்பது போன்ற அமைப்பைப் பெற்ற குழந்தைகளுக்கு, நல்ல தசாபுக்தி நடைபெறும் போது நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எளிதாகப் பெறுவார்கள். தடைகள் ஏற்படாது.
நல்ல மதிப்பெண் பெற்றதால் புகழ்பெற்ற கல்லூரியில் மேற்படிப்பு. அங்கிருந்து சிறந்த நிறுவனத்தில் நல்ல சம்பளத்திற்கு பணியில் சேரும் இவர்கள், தங்களின் வாழ்க்கையை சுருக்கிக் கொள்கின்றனர். இவர்களில் சிலருக்கு வாழ்வில் ஏதாவது ஒரு சிறிய பிரச்சனை ஏற்படும் போது அதனை தீர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிலருக்கு வாழ்க்கையே சின்னாபின்னமாகி விடுகிறது.
ஐ.கியூ. அதிகமுள்ள மாணவர்கள் படிப்பில் சுமாராக இருந்தாலும், குறிப்பிட்ட பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுப்பார்கள். அதற்கு காரணம் சம்பந்தப்பட்ட பாடத்தை நடத்தும் ஆசிரியர் பயிற்றுவிக்கும் முறை வித்தியாசமானதாக, அந்த மாணவருக்கு பிடித்தமான முறையில் இருக்கும். 
கல்வியில் கூட தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான விடயங்களில் மட்டுமே அதிக கவனம் செலுத்துவர். எனவே ஐ.கியூ அதிகமுள்ள மாணவர்கள் தங்கள் வாழ்வில் கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அதனை சமாளிக்கும் மனப்பக்குவத்தைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.
கல்வி என்பது மனம் தொடர்பானது. எனவே, மாணவர்களை கல்வி கற்கும் சூழலுக்கு ஆசிரியர்கள் முதலில் ஊக்கப்படுத்தி தயார்படுத்த வேண்டும். எனினும் ஒவ்வொரு மாணவனின் ராசி, நட்சத்திரம், தசா புக்தி என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியாது. 
பெற்றோர்தான் தங்களது மகன், மகளுக்கு என்ன தசாபுக்தி நடக்கிறது என்று கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்

 

7 புத்திசாலித்தனம், வீரம், அன்பு ஆகியவை ஒருவருக்கு ஒருவர் மாறுபடுவது ஏன்?  


ஒரு கரு உருவாகும் போது அதில் டி.என்.ஏ., ஆர்.என்.ஏ போன்ற அடிப்படை மூலக் கூறுகளை பெற்றோரின் மரப்புக்கூறில் இருந்து கருவுக்கு கடத்துவது 5ஆம் இடம் மற்றும் அதற்கு உரிய கிரகமாகும். எனவே, ஒருவர் ஜாதகத்தில் 5ஆம் இடம் நன்றாக இருக்க வேண்டும்.
ஐந்தாம் அதிபதி நன்றாக இருந்தால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்து, கௌரவம், பாரம்பரியத்தை அந்த ஜாதகர் காப்பாற்றுபவராகவும், முன்னோர்களின் சொத்தை வைத்து முன்னுக்கு வருபவராகவும் இருப்பார். 
ஒருவரின் ஜாதகத்தில் 5ஆம் இடம் பலவீனமாக இருந்தாலும், லக்னாதிபதி நன்றாக இருந்தால் தனது முயற்சியால் வாழ்க்கையில் அவர் முன்னேறுவார். ஆனால் ஒருமுறை முயன்றால் இவர்களுக்கு வெற்றி கிடைக்காது. பலமுறை முயற்சிக்க வேண்டும். 
லக்னாதிபதி நன்றாக இருந்து (ஆட்சி, உச்சம் பெறுதல்), நீச்சம் பெறாமல் பரிவர்த்தனை யோகம் பெற்றிருந்தால் அவருக்கு வீரம், விவேகம் ஒருசேர இருக்கும். 
ஜோதிடத்தைப் பொறுத்தவரை சண்டை, சச்சரவுகளை உருவாக்கக் கூடியது 6ஆம் இடமாகும். ஒருவர் ஜாதகத்தில் 6க்கு உரியவன் பலவீனம்/மறைந்து இருந்தால், அவர் சண்டை, சச்சரவில் ஈடுபட மாட்டார்.
ஆறுக்கு உரியவர் 6இல் (வலுவாக) இருந்தால் அந்த ஜாதகர் எப்போதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பார். ஏதாவது ஒரு பிரச்சனையைக் கிளப்புவார். நேரடியாக சண்டையில் இறங்காவிட்டாலும், மற்றவர்களை தூண்டிவிட்டு கலகம் ஏற்படுத்துவர். கடன் தொல்லையும் ஏற்படும்.



8 மனிதனின் கடைசிப் பிறவியில் வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்?  


ஜோதிடத்தைப் பொறுத்தவரை ஒரு மனிதன் எத்தனை பிறவி எடுப்பார் என்பதை கணிப்பது பற்றி முந்தைய பதில்களில் கூறியிருந்தீர்கள். ஒருவர் தனது கடைசிப் பிறவியை எடுக்கும் போது அவரது வாழ்க்கை நிலை எப்படி இருக்கும்.
அதாவது ஆசைகளுக்கு அடிபணியாமல், திருமணம் செய்து கொள்ளாமல் துறவறம் பூண்டு பிற உயிர்களின் நன்மைக்காகவே அவர் வாழ்க்கை நடத்துவாரா?

பதில்: ஜோதிடத்தில் தற்போது 9 கிரகங்கள் (நவகிரகங்கள்) உள்ளன. ஆனால் முற்காலத்தில் 7 கிரகங்கள் மட்டுமே இருந்ததாக சங்க கால நூல்கள் கூறுகின்றன. அதன் பின்னர் கேது, ராகு ஆகிய 2 நிழல்/சாயா கிரகங்கள் ஜோதிடத்தில் இடம்பெற்றதாக வரலாறு கூறுகிறது. அறிவியல் ஆய்வாளர்கள் இதனை சூரிய கரும்புள்ளி (கேது), சந்திரக் கரும்புள்ளி (ராகு) என்று கூறுகின்றனர். 
ஒருவர் ராகுவின் ஆதிக்கத்தில் தனது கடைசிப் பிறவியை முடித்துக் கொள்கிறாரா? அல்லது கேதுவின் ஆதிக்கத்தில் முடித்துக் கொள்கிறாரா? என்பதை முதலில் ஜோதிட ரீதியாக கணிக்க வேண்டும். 
ராகுவின் ஆதிக்கத்தில் அல்லது ராகுவின் நட்பு கிரகங்களான சுக்கிரன், சனி ஆகியவை யோக நிலையில் இருந்து மோட்ச ஸ்தானமும் வலுவாக அமைந்து இறுதிப் பிறவியை அவர் முடித்துக் கொள்பவராக இருந்தால், அவருக்கு அனைத்து சுகபோகங்களையும் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். உணவு, உடை, வாகனம், மனைவி, குழந்தை, வசதி வாய்ப்பு ஆகியவற்றை அனுபவித்த பின்னரே அவர் முக்தி அடைவார்.
ஆனால் கேதுவின் ஆதிக்கத்தில் முக்தி அடைபவரின் வாழ்க்கை நிலை இதற்கு நேர்மாறாக இருக்கும். அதாவது, சிறுவயதில் இருந்தே துறவறம் எய்துதல், பள்ளிப் பருவத்திலேயே காவி உடை அணிவது போன்றவை அவருக்கு நிகழும். திருமணம் செய்து கொண்டாலும் குழந்தை பாக்கியம் கிடைக்காமல் போகலாம். குழந்தை பிறந்தாலும், அவர்களால் அவஸ்தைப்பட்டு அதன் பின்னர் முக்தி அடைய நேரிடும். 
எனவே, ஒருவரின் ஜாதகத்தை முழுமையாக கணித்த பின்னரே அவரின் இறுதிப்பிறவி எப்படி இருக்கும் எனக் கூற முடியும். 



சிரித்த முகம்; சிடுமூஞ்சி – இதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு உண்டா?  


பொதுவாக சனி/செவ்வாய்/ராகு/கேது ஆகியவற்றில் ஏதாவது ஒன்று லக்னத்தில் இருந்தால் அவரது முகத்தில் சிடுசிடுப்பு காணப்படும். குறிப்பாக செவ்வாய் லக்னத்தில் இருந்தால் மூக்கிற்கு மேல் கோபப்படுபவராக இருப்பார்.
லக்னத்தில் சூரியன் இருந்தாலும் அவரது கோபம் சுட்டெரிக்கும் வகையில் இருக்கும். ஆனால் நியாயமான விடயத்திற்கு மட்டுமே கோபம் வரும். லக்னத்தில் சனி இருந்தால் அவருக்கு அசட்டுத்தனமான கோபம் இருக்கும். ஆனால் அவரது மனதில் என்ன நினைக்கிறார்கள் என்பதை முக பாவனையில் இருந்து அறிய முடியாது.
லக்னத்தில் சுக்கிரன், குரு, புதன், வளர்பிறை சந்திரன் அமர்ந்திருந்தால் அவர்கள் எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படுவார்கள். சிலருக்கு லக்னத்தில் சனி இருந்தாலும், நல்ல நிலையில் உள்ள குரு (வக்ரம், நீச்சமடையாத, பாவிகள் சேர்க்கை பெறாத) அந்த சனியைப் பார்த்தால் அவர்கள் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். எதிரில் இருப்பவர் பைத்தியம் என்று நினைக்கும் அளவுக்கு சிரிப்பார்கள். 
மேலும் 5, 9வது இடத்திற்கு உரிய கிரகங்கள் லக்னத்தில் இருந்தாலும் அந்த ஜாதகர் சிரித்த முகத்துடன் இருப்பார். ஏனென்றால் 5ஆம் இடம் ஒருவரின் மனப்பான்மையை குறிக்கும். ஒருவரின் ஜாதகத்தில் 5க்கு உரியவர் லக்னத்தில் இருந்தால் அவர் பலவற்றையும் அலசி ஆராய்ந்து தெளிவான முடிவெடுப்பவராகவும், கோபத்தை எளிதில் வெளிப்படுத்தாதவராகவும், எப்போதும் மலர்ந்த முகத்துடன் இருப்பார்.
சிரித்த முகம், சிடுமூஞ்சி ஆகியவற்றைப் பற்றி மட்டுமல்லாமல், உடலமைப்பு, குணம் ஆகியவற்றைப் பற்றியும் சங்க கால ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.







10  சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் இருந்தாலும், பிற பெண்களுடன் தொடர்பு ஏற்படுவது ஏன்?  

Tamil Astrology:  
ஜோதிடத்தில் ஏக தார (ஒரே மனைவி) ஜாதகங்கள், பல தார (பல மனைவிகள்) ஜாதகங்கள் உண்டு. ஒரு சிலர் முதல் திருமணம் முடித்தவுடன் அடுத்த ஆண்டே மீண்டும் ஒரு திருமணம் செய்து கொள்வர். இவர்களுக்கு ஒரு திருமணத்தால் மனத்திருப்தி ஏற்படாது.
சமீபத்தில் என்னிடம் இதுபோன்றதொரு ஜாதகம் (பல மனைவிகள் உடையவர்) வந்தது. அவருக்கு மேஷ லக்னம், மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரம். அவருக்கு லக்னத்திலேயே ஆண் கிரகங்களான குரு, செவ்வாய் வலுவாக இருந்தது. சந்திரனும் சேர்க்கை பெற்றிருந்தார்.  அவருக்கு செவ்வாய் லக்னாதிபதி. அது லக்னத்திலேயே இருப்பதாலும், குருவும் லக்னத்தில் உள்ளதாலும் அவர் ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும். மேலும், 4ஆம் அதிபதியான சந்திரனும் லக்னத்திலேயே 2 யோக கிரகங்களின் சேர்க்கை பெற்றுள்ளதால் அவர் ஒழுக்க சீலராக விளங்க வேண்டும்.
மேலோட்டமாகப் பார்த்தால் இவருடையது மிக சிறப்பான ஜாதகம். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து முன்னேறி செல்வாக்கான நிலையை அவர் எட்டியிருந்ததால் தற்போது அவருக்கு காசு, பணத்தில் குறையில்லை.
ஆனால் லக்னத்தில் உள்ள செவ்வாய், குரு, சந்திரனின் சேர்க்கையை, 11ஆம் இடத்தில் உள்ள சனி (பாதகாதிபதி) பார்த்ததால், அவருக்கு காம இச்சை அதிகரித்துவிட்டது. இதனால் அவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகள் உருவாகினர். இன்றைய தேதியில் அவருக்கு 3 மனைவிகளும், 6 குழந்தைகளும் உள்ளனர். இதுமட்டுமின்றி வேறு சில பெண்களிடமும் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளதை அவரே ஒப்புக்கொண்டார்.
அவரது ஜாதகத்தில் போகஸ்தானத்திற்கு உரிய கிரகமான புதன், தனக்கு 12இல் மறைந்து சூரியனுடன் சேர்ந்துவிட்டார். இதனால் இவருக்கு போகம் தொடர்ந்து கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சுக்கிரனுடன், ராகு இருந்ததால் (3வது வீட்டில்) நீண்ட நேரம் கலவி புரியும் ஆற்றலும் அவருக்கு இருந்ததை ஒப்புக்கொண்டார்.
மேலும், தன்னை விரும்பி ஏற்றுக்கொள்ளும் பெண்களுடன் மட்டுமே தாம் தொடர்பு வைத்துக் கொள்வதாகவும், தாமாக யாரையும் பலவந்தப்படுத்துவதில்லை என்றும் தனது தரப்பு நியாயத்தைக் கூறினார். 
அவர் காமத்தில் மிகுந்த நாட்டம் உள்ளவராக இருந்தாலும், லக்னத்தில் சுபகிரகங்கள் இருப்பதால், விருப்பமில்லாத பெண்களுக்கு அவர் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை. இப்படி ஒருபுறம் நல்ல மனிதராகவும், மறுபுறம் பல பெண்களுடன் தொடர்புள்ளவராகவும் அவர் வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.
தற்போது 45 வயதைக் கடந்து விட்ட அவருக்கு இனி வரும் காலங்கள் சிறப்பாக இல்லை என்பதையும், பெண்கள் விடயத்தில் அவர் இனியும் கவனமாக இல்லாவிட்டால், பெண் பிரச்சனையால் நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்தித்து அவமானப்படுவதுடன், தனது சொத்துக்களையும் இழக்க நேரிடும் என ஆலோசனை கூறி அனுப்பினேன் 



11  அடுத்த ஜென்மத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ளும் தகுதி மனிதர்களுக்கு உண்டா?  


தற்போதைய வாழ்க்கையில் நல்ல காரியங்களை செய்து, பாவங்களை தவிர்த்தால், அடுத்த ஜென்மத்தில் சிறப்பான வாழ்க்கை அமையும் என்று சிலர் கூறுகின்றனர். இதனை ஜோதிடம் எப்படிப் பார்க்கிறது?
பூர்வ ஜென்மம், தற்போதைய ஜென்மம், அடுத்த ஜென்மம் ஆகியவற்றை உணர்த்துவதே ஜாதகம்/ஜோதிடத்தின் பிரதான கொள்கை. நவகிரகங்களும் இதைத்தான் உணர்த்துகின்றன. 
ஊழ்வினை பற்றி வள்ளுவரை குறிப்பிட்டுள்ளார். ஜோதிடத்தைப் பொறுத்த வரை சனிதான் ஊழ்வினைக் கோள். அது எந்தவீட்டில் இருக்கிறது, எந்த கிரகத்துடன் சேர்ந்துள்ளது, எந்த நட்சத்திரத்தில் அமர்ந்துள்ளது என்பதைப் பொறுத்தே அந்த ஜாதகர் தன் வாழ்வில் கிடைக்கும் யோகங்களை தடையில்லாமல் அனுபவிப்பாரா? என்பதைக் கூற முடியும். 
ஊழ்வினைக் கோளை வைத்துதான் முற்பிறவி, தற்போதைய ஜென்மம், மறுஜென்மம் ஆகியவற்றைக் கணிக்க முடியும். ஒரு சிலர் 4 பங்களா வைத்திருந்தாலும், அதனை அனுபவிக்க முடியாமல் வாடகை வீட்டில் வசிப்பார்கள். இது ஊழ்வினைப் (முன் ஜென்மத்தில் செய்த பாவம்) பயன்.
பெரும்பாலான பெண்கள்/ஆண்களின் திருமணத்தில் பெரும் தடையாக செவ்வாய் தோஷம் கருதப்படுகிறது. ஆனால் இந்த தோஷம் எப்படி ஏற்படுகிறது என்று நம்மில் பலருக்கு ஜோதிட ரீதியாக தெரிவதில்லை.
செவ்வாய் தோஷம் குறித்து ஒரு கூட்டத்தில் என்னைப் பேசும்படி அழைத்திருந்தார்கள். அதில் பேசிய நான், சகோதரத்துவத்திற்கும், பூமிக்காரகனாகவும் செவ்வாய் விளங்குகிறார். எனவே, முற்பிறவில் சகோதர/சகோதரிகளுக்கு துரோகம் செய்தவர்கள், அடுத்தவர் சொத்துக்களை அபகரித்தவர்களுக்கு இந்த ஜென்மத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும்.
மற்றவர்களின் உழைப்பில் (ரத்தம்) குளிர் காய்ந்தவர்களுக்கும் கடுமையான செவ்வாய் தோஷம் ஏற்படும். குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் 7, 8வது இடத்தில் செவ்வாய் அமர்வதால் திருமணம் தள்ளிப்போகும். இளமை முடியும் தருவாயில், காலம் கடந்த நிலையில் திருமணம் கைகூடும். இதுதான் செவ்வாய் தோஷம் என்று கூறினேன். 
எனவே, அடுத்த பிறவியில் செவ்வாய் தோஷம் ஏற்படக் கூடாது என்று விரும்புபவர்கள், இந்த ஜென்மத்தில் தன்னுடைய சகோதர/சகோதரிகளுக்கு தீமை செய்யாமல், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்துக் கொள்ளாமல் இருந்தாலே போதும். முடிந்த வரை அவர்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடுங்கள்; இல்லாவிட்டால் ஒதுங்கி நில்லுங்கள்; கெடுதல் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினேன். 
இந்தப் பிறவியில் நல்ல காரியங்களை செய்து, தியாகங்கள் மூலமாக அடுத்து வரும் பிறவி, அடுத்து வரும் சந்ததி ஆகியவற்றை சிறப்பாக உருவாக்க நம்மிடமும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்கும் ஜாதகத்தில் இடம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஒரு சில ஜாதகர்கள் நல்ல காரியம் செய்ய நினைத்தாலும், அவர்களுக்கு நடக்கும் மோசமான தசா புக்தி அதனைச் செய்ய விடாமல் தடுத்து விடுவதையும் பார்க்கிறோம். இதைத்தான் “அவன் சும்மா இருந்தாலும் அவன் சுழி சும்மா இருக்க விடாது” என்று பெரியவர்கள் கூறுவர்.



12  காமத்தை அடக்க என்ன செய்ய வேண்டும்?  


ஒருவரது ஜாதகத்தில் 3ஆம் இடம் இச்சைக்குரியதாக கொள்ளப்படுகிறது. இதில் இச்சை என்ற வார்த்தைக்கு காமம் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. ஒரு சிலருக்கு பணத்தின் மீது இச்சை இருக்கும். மற்றொருவருக்கு உணவுப் பண்டங்களின் மீது இச்சை இருக்கும். சிலருக்கு தங்கள் தொழில் மீது இச்சை இருக்கும். உடல் இச்சையும் இதில் அடங்கும். 
பொதுவாக 3வது வீட்டில் நல்ல கிரகங்கள் இருப்பது சிறப்பான பலனைத் தரும். ஆனால் 6வது, 8வது, 12வது வீட்டிற்கு உரிய கிரகங்கள் 3இல் அமர்ந்திருந்தால் தினசரி உடலுறவு கொள்ளக் கூடிய நிலை அல்லது ஒரே நாளில் பலமுறை உறவு கொள்ளும் எண்ணத்தை அது ஏற்படுத்தும். இவர்களுக்கு லக்னாதிபதி சரியாக இருந்து விட்டால் இந்த எண்ணங்களை ஒழுக்க நெறிகள் மூலம் அவர்கள் கட்டுப்படுத்துவர். 
எனவே, 3வது வீட்டில் ஒருவருக்கு என்ன கிரகம் உள்ளது என்பதைப் பார்ப்பதுடன், லக்னாதிபதி யாருடன், எந்த வீட்டில் இருக்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். ஏனென்றால் உடல், அழகு, எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றை நிர்ணயிப்பது லக்னாதிபதி.
காம இச்சை அதிகம் உடையவர்கள் இந்தக் கோயில் வழிபாடு அல்லது பரிகாரங்களை மேற்கொண்டால் பலன் கிடைக்கும் என்று பொதுவாகக் கூறிவிட முடியாது. அவரவர் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளைக் கொண்டு தனிப்பட்ட முறையில் பரிகாரங்களை வகுக்க வேண்டும். 
லக்னாதிபதி பலவீனமாக, மறைந்து பாவ கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் முரண்பாடான இச்சைகள் மனதில் தோன்றும். உடலுறவில் திருப்தியற்ற நிலை ஏற்படும். மனைவியைப் பொறுத்த வரை கணவருக்கு போதுமான இன்பம் கொடுத்திருப்பார். ஆனால் கணவருக்கு அதனால் மனத்திருப்தி ஏற்படாமல் போகலாம். இதனால் சபலம் ஏற்பட வாய்ப்புள்ளது.

 
காம உணர்வும் யோகமும்!  


புகைப் பிடித்தல், மது அருந்துதல் தவிர்த்து இன்னுமோர் அபாயமிருக்கிறது, அது காம விருப்பு சம்பந்தமானது. யோகம் தனது தூய்மையாக்கும் வேலையைச் செய்யும் போது உன்னிடம் பதுங்கிக் கிடக்கும் வேகங்களையும் ஆசைகளையும் மேலுக்கு எறிகின்றது. நீ விஷயங்களை ஒளிக்காமலும், ஒதுக்கிவைக்காமலும் இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். நீ அவைகளைச் சந்தித்து, வென்று, அவைகளுக்குப் புது உருவம் தரவேண்டும்.


யோகத்தின் முதற்பயன் என்னவெனில் மனத்தின் ஆதிக்கம் தளர்ந்துவிடுகிறது. உள்ளே உறங்கிக் கிடக்கும் வேட்கைகள் திடீரென விடுதலையடைந்து குப்பென்று கிளம்பி ஆதாரத்தை ஆக்கிரமிக்கின்றன. மனத்தின் ஆதிக்கம் இருந்த இடத்தில் இறைவனின் ஆட்சி ஸ்தாபிக்கப்படாத வரையில் ஓர் இடைநிலை ஏற்படுகிறது. அதுசமயம் உனது நேர்மையும் சரணமும் சோதனைக்குட்படும்.


காம உணர்ச்சி போகன்ற வேகங்களின் பலமானது சாதாரணமாக ஜனங்கள் அவைகளின் மீது அதிகமாகக் கவனம் செலுத்துவதிலிருந்தே வருகின்றது. அவர்கள் அவைகளை மிக அழுத்தமாக மறுத்து பலவந்தமாகக் கட்டுப்படுத்தவும் உள்ளே அமுக்கிவிடவும் முயல்கின்றனர். ஆனால் ஒன்றை நினைத்துக்கொண்டே, "அது எனக்கு வேண்டாம், அது எனக்கு வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டு போனால் நீ அதற்குப் பந்தப்பட்டுப் போகிறாய். நீ செய்ய வேண்டியது என்னவெனில், அதை உன்னிடமிருநூது சிலக்கி, அதனுடைய உறவு வைத்துக்கொள்வதை நிறுத்தி, கூடுமானவரை அதைக் கவனிக்காமல் இருந்துவிட வேண்டும். நீ அதை நினைக்க நேரிட்டாலும் அசட்டையாயும் கவலையில்லாமலும் இருந்துவிட வேண்டும்.


யோகத்தின் நெருக்கத்தினால் மேலே கிளம்பிவரும் வேகங்களும் ஆசைகளும் உனக்கு அந்நியமாயும் புறஉலககைச் சேர்ந்தவையாயும் இருப்பவைபோலக் கருதி அவைகளைப் பற்றற்ற நோக்குடனும் அமைதியுடனும் நீ சந்திக்க வேண்டும். இறைவன் அவற்றை எடுத்துக்கொண்டு உருமாறுதல் செய்யும் பொருட்டு அவற்றை இறைவனுக்கே அர்ப்பணம் செய்துவிட வேண்டும்.
உன்னை ஒருதரம் இறைவனுக்குத் திறந்துவிட்டு, இறைவனது சக்தியும் உன்னுள்ளே இறங்கிவர ஆரம்பித்தபிறகு நீ பழைய சக்திகளோடு ஒட்டிக்கொண்டிருக்க முயன்றால், தொந்தரவுகளுக்கும், கஷ்டங்களுக்கும் அபாயங்களுக்கும் நீயே வழிதேடிக்கொள்வாய். நீ விழிப்புடனிருந்து, உனது ஆசைகளைத் திருப்தி செய்வதன் பொருட்டு இறைவனை ஒரு மறைப்பாக உபயோகித்துக் கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.


13 உதிக்கும் போது விதிக்கப்பட்டது என்ன?  


ஒரு குழந்தை பூமியில் பிறக்கும் போது உள்ள கிரக அமைப்புகள், இவனுக்கு/இவளுக்கு இதுதான் என்று நிர்ணயித்து விடுகின்றன. படிப்பு இவ்வளவுதான், மனைவி இப்படித்தான், சாப்பாடு இவ்வளவுதான் என உதிக்கும் போதே விதிக்கப்பட்டு விடுகிறது.
எனவே உதிக்கும் போது நமக்கு விதிக்கப்பட்டது என்ன என்பதை (வாழ்க்கை சூட்சுமம்) அறிந்து அதற்கு ஏற்றவாறு வாரிசுகளுக்கு வாழ்க்கைத் துணையை பெற்றோர் அமைத்துத் தர வேண்டும். நம்மிடம் 10 வீடு உள்ளது, 25 பேருந்து ஓடுகிறது என்ற வகையில் அந்தஸ்து பார்த்து திருமணம் செய்து வைத்தால் சிறப்பாக இருக்காது.
ஏனென்றால் மகனின் ஜாதகத்தில் மனைவி ஸ்தானம் பலவீனமாக இருந்தால் ஏழைக் குடும்பம், 10ஆம் வகுப்பு படித்த பெண்ணை மணமுடித்தால்தான் அவரது வாழ்க்கை இறுதிவரை சிறப்பாக இருக்கும்.
உதாரணமாக, சிலருக்கு ஈனப் பெண்ணுடன் (படிப்பு, அந்தஸ்து, வசதி குறைந்த) வாழ வேண்டும் என்ற கிரக அமைப்பு உள்ளவர்களும் இருக்கிறார்கள். மிகவும் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த, சிவில் சர்வீஸ் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்ற ஒருவர், குறத்தி இனத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். 
மேலும், அப்பெண் குறத்தி இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், கஷ்டப்பட்டு படித்து அரசு உத்தியோகத்தில் உள்ளார். பல பெண்களைப் பார்த்தும் மனதில் திருமண ஆசை தோன்றாத சிவில் சர்வீஸ் அதிகாரிக்கு, குறத்தி இனத்தைச் சேர்ந்த அப்பெண்ணை கண்டதும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றியுள்ளது.
அவர் இதுகுறித்து என்னிடம் கேட்கும் முன்பாகவே அவரது ஜாதகத்தை நான் (சிவில் சர்வீஸ் தேர்வின் போது) பார்த்துள்ளேன். அப்போதே அவருக்கு தகுதி, அந்தஸ்து, படிப்பு குறைவான பெண்தான் மனைவியாக வருவார் என்று தெரியும்.
திருமணம் குறித்து அவர் பலமுறை கேள்வி எழுப்பியும், புன்சிரிப்பை மட்டுமே பதிலாக அளித்தேன். அவரும் முயன்றவரை முயற்சித்துப் பார்த்தார். இப்போது திருமணத்திற்கு என்ன அவசரம், முதலில் சிவில் சர்வீஸ் தேர்வை வெற்றிகரமாக முடியுங்கள் என்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
 

14  உணவுப் பழக்கம் மூலம் காமத்தைக் கட்டுப்படுத்த முடியுமா?  காம இச்சை அடக்க முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு, பொதுவான பரிகாரம் ஏதாவது உள்ளதா?


உணவுப் பழக்கம் என்பது பல்வேறு உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடிய விடயமாக நமது நாட்டில் கருதப்படுகிறது. உதாரணமாக, துறவிகள், பூசாரிகள், சன்னியாசிகள் ஆகியோர் சாத்வீக (உப்பு, காரம் இல்லாத) உணவுகளை உட்கொள்கின்றனர். அந்த உணவின் மூலம் உடல் இயக்கத்திற்கு தேவையான சக்தி கிடைக்கும் என அவர்கள் கூறுகின்றனர். 

ஆனால், கடுமையான விரதப்போக்குடன் வாழக்கூடிய பூசாரிகள், சன்னியாசிகளில் ஒரு சிலர் காம லீலைகளில் ஈடுபட்டதாக சிக்கிக் கொள்கின்றனர். இது ஏன்?
பதில்: உடல் நலனை நிர்ணயிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாக உணவு திகழ்கிறது. ஆனால் உணவின் மூலமாக மட்டுமே ஒருவருக்கு காம எழுச்சி ஏற்படுவதில்லை. இந்த விடயத்தில் மனித மனத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். 
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இரண்டின் நிலையையும் பார்க்க வேண்டும். லக்னாதிபதி, ராசிநாதன் ஆகிய இருவரும் நன்றாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் அந்த கிரகங்களின் தசை நடக்கும் போது அவர்கள் பாதை மாறி காம லீலைகளில் ஈடுபட நேரிடும். எனவே, உணவுப் பழக்கத்தால் மட்டுமே காம இச்சையை குறைத்து விட முடியும் என்று எண்ணக் கூடாது.
வெங்காயம், பூண்டு, அசைவ உணவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து பாதி உப்பு, பாதி காரத்தில் மட்டும் சாப்பிட்டால் காம இச்சை முற்றிலுமாக அடங்கிவிடாது. மனதைக் கட்டுப்படுத்துவதற்கும் சில பயிற்சிகளைச் செய்ய வேண்டும். அதற்கு மனோகாரகன் (சந்திரன்) ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருக்க வேண்டும். 
ஜோதிடத்தில் சந்திரனை பலவீனப்படுத்தும் கிரகங்களும் உள்ளன. அதுபோன்ற கிரகங்களின் தசை நடக்கும் போது சம்பந்தப்பட்டவர் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். 
இதேபோல் 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது பொதுவாகவே காம இச்சை அதிகரிக்கும். அதுபோன்ற காலத்தில் சம்பந்தப்பட்டவர் தன்னை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும். அதை விடுத்து மனம் போன போக்கில் காம லீலைகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை, அவமானம் ஆகியவற்றை ஏற்க நேரிடும்.



இந்த விஷயத்தைப் பொறுத்தவரை பொதுவான பரிகாரம் என எதையும் கூற முடியாது. சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தை முழுமையாகப் பார்த்த பின்னரே அவருக்கான பரிகாரத்தைக் கூற முடியும். 
உதாரணமாக, 3, 6, 8, 12க்கு உரியவர்களின் தசை நடக்கும் போது அவருக்கு ஏழரைச் சனி நடந்தால், அவர் எப்படி வாழ்ந்தாலும் காம இச்சைகள் தொடர்பான விவகாரங்களில் சிக்கிக் கொள்வார்.
ஒரு சிலர் சொந்த ஊரில் இருந்தால் தானே பிரச்சனை என்று மனதில் நினைத்துக் கொண்டு, அண்டை மாநிலத்திற்கும், அயல்நாடுகளுக்கும் சென்று தங்கள் இச்சைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதனால் அவர்கள் விதியிடம் இருந்து தப்பமுடியாது. மாறாக உடல்நலனைக் கெடுத்துக் கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் அவர்களுக்கு தண்டனையாகவே கருதப்படும்.
எனவே, அதுபோன்ற மோசமான தசை நடக்கும் போது மனதை அடக்க தியானம் செய்வதே சிறந்தது என சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தியானம் என்றால் என்னவென்றே பலருக்கு தெரியவில்லை. அதுபோன்றவர்கள் கடுமையான உடற்பயிற்சி, பயணம் மேற்கொள்ளலாம். 
உடற்பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் அன்றாடப் பணிகளின் மூலம் தனது வேலைப்பளுவை அதிகரித்துக் கொள்ளலாம். தோட்டம் அமைக்கலாம், உளவாரப் பணிகளை மேற்கொள்ளலாம். இதனால் அவர்களுடைய உடலில் ஏற்படும் இச்சைகளும், மனதில் ஏற்படும் மாசுகளும் குறையும்/மறையும். 
ஒரு சிலர் ஆலயத்திற்கு உள்ளேயே தவறான காரியங்களில் ஈடுபடுகிறார்களே? என்று பலர் கேட்கலாம். எந்த வகையான உடல் உழைப்பும் இன்றி விதவிதமான உணவு வகைகளை உட்கொள்வதால் அவர்களுக்கு காமஇச்சை அதிகரித்து வழிதவறி இருக்கிறார்கள். 
எனவே, உடலை வருத்தி உழைத்து, ஏழை, எளிய மக்களுக்கு பயன்படும் விதத்தில் சில பணிகளை மேற்கொண்டால் மனம் தெளிவுபெறும். அதுமட்டுமின்றி காமம் நிலையானது அல்ல என்பதை சம்பந்தப்பட்டவர்கள் மனதளவில் உணர வேண்டும். 
அதனை உணர முடியாதவர்கள் மருத்துவமனைக்கு சென்று நோயாளிகளுக்கு சில பணிவிடைகளைச் செய்வதுடன், அவர்கள் படும் அவஸ்தைகளை பார்த்தால் உடல் நிலையற்றது என்ற எண்ணம் அவர்கள் மனதில் ஆணித்தரமாக பதிவாகிவிடும்



15 மு‌ன்கூ‌ட்டியே அ‌றியு‌ம் ச‌க்‌தி உ‌ண்மையா?  


Tamil Astrology: ஏதாவது ஒரு நல்லது, கெட்டது நடைபெறுவதற்கு முன்பு சிலருக்கு சில அறிகுறிகள் தெரியும் அல்லது சில நிகழ்வுகள் அவர்களுக்கு நடக்கும் என்று கூறுவது உண்மையா? அது எப்படி ஏற்படுகிறது? 

                                                            ஒவ்வொரு ஜாதகத்திலும் லக்னத்திற்கு 5ஆம் இடம் பூர்வ புண்ணியம் என்று சொல்வார்கள். அந்த பூர்வ புண்ணியஸ்தானத்தில் சுப கிரகங்கள் அமர்ந்திருந்தால் ஒரு இன்டியூஷன் பவர் (உ‌ள்ளுண‌ர்வு ச‌க்‌தி) அவர்களுக்கு உண்டு. சங்க கால நூல்களில் பார்த்தீர்களானால் நிமித்தம், அசரீரி என்றெல்லாம் சொல்வார்கள். 

உதாரண‌த்‌தி‌ற்கு, அவர் வெளியில் வந்தார் உடனே காக்கை வடமிருந்து இடமாகப் போய்விட்டது. அதனால் அவர் திருப்தியில்லை என்று சொல்லிவிட்டார். அதனால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார். சில நிமித்தங்களையும் நாம் பார்க்க வேண்டும். நிமித்தங்களைப் பார்த்துப் பார்த்து பழக்கப்பட்டாலேயே நமக்கு இன்டியூஷனெல்லாம் வர ஆரம்பிக்கும்.
 





16 வீடு, மனை வாங்க ஜோதிடம் அவசியமா?  
  சிலர் வீட்டு மனை வாங்குவதை, வீடு கட்டுவதை முதலீடாகவே செய்கிறார்கள். அப்படி வாங்கிவிட்ட பிறகு சட்டச் சிக்கல், இரண்டு பேர் பதிவு செய்துவிட்டார்கள், ரவுகளால் மிரட்டப்படுகிறார்கள் என்றெல்லாம் வருகிறது. இப்படி மக்கள் நிறைய கஷ்டப்படுகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளை, உங்களைப் போன்ற ஜோதிடர்களிடம் ஆலோசனை பெற்ற பின்னர் வாங்கினால் தவிர்க்க முடியுமா?

 தினசரி ஒருத்தரையாவது இதுபோன்ற பிரச்சனையுடன் சந்திக்கிறோம். பூமிக்காரகன் செவ்வாய். இந்தச் செவ்வாய் நீச்சமாய் இருந்தாலோ, 8, 12ல் போய் மறைந்திருந்தாலோ அவர்கள் பெயரில் பூமி வாங்கக் கூடாது. அவருடைய மனைவிக்கு செவ்வாய் நன்றாக இருந்தால், அவர்கள் பெயரில் வாங்கிக் கொள்ளுங்கள். உங்க பெயரில் வாங்கிவிடாதீர்கள் என்று சொல்கிறோம்.

அப்படி வாங்குவதென்றால் ஃபிளாட்ஸ் ஏதாவது ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள். ஏனென்றால் கட்டடக்காரகன் சுக்ரன். பூமியாக இருக்கும் போதுதான் செவ்வாய். பூமியை கட்டிவிட்டால் அது சுக்ரன் நிலைக்குப் போய்விடும். அப்பொழுது குடும்பத்தில் யாருக்கு செவ்வாய் நன்றாக இருக்கிறதோ, அதாவது பூமிக்காரகன் நன்றாக இருக்கிறதோ அவர்கள் பெயரில் பூமியை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.

ஒரு‌த்தரு‌க்கு மிதுன லக்னம். இந்த மிதுன லக்னத்தில் 4வது வீட்டில் கன்னியில் செவ்வாய். கன்னிச் செவ்வாய் கடல் நீரையும் வற்றச் செய்யும். 4வது வீட்டில் செவ்வாய் இருந்தால் ஒரு வகையில் பரவாயில்லை. ஆனால், அது கன்னியில் இருப்பதால் உங்கள் பெயரில் பூமி எதையும் வாங்க வேண்டாம், அது சரியாக வராது என்று சொன்னேன்.

6க்கு உரியவர்களுடைய திசை, 8க்கு உரியவர்களுடைய திசை, செவ்வாய் ராகு, செவ்வாய் சனி சேர்ந்திருந்து செவ்வாய் திசை இதெல்லாம் நடந்தால் அவர்கள் வாங்கிய சொத்தை மற்றொருவர் அபகரிப்பார்கள், இல்லையென்றால் அது கையைவிட்டுப் போகும் அல்லது யாராவது ஆக்கிரமிப்பு செய்வார்கள் என்று இத்தனையையும் பார்த்துதான் சிலருக்கெல்லாம் பூமியை வாங்கலாம், பூமியை வாங்கக்கூடாது கட்டடமாக வாங்கிக் கொள்ளுங்கள், செவ்வாய் பலவீனமாக இருந்தால் கீழ்த்தளத்தில் குடியிருக்காதீர்க‌ள், முதலாவது, 2வது மாடிக்கு மாறிக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

அடுத்து, செவ்வாய் அவர்களுடைய ஜாதகத்தில் என்ன மாதிரி இருக்கிறது என்று பார்த்துவிட்டு கருமண் பூமி அல்லது செம்மமண் பூமியை வாங்குங்கள். செவ்வாய் சந்திரனுடன் இருந்தால் மணல் பகுதியை வாங்குங்கள். அதாவது நதியை ஒட்டி, கடலோரப் பகுதிகளில் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று இவ்வளவு விஷயங்களையும் சொல்கிறோம்.

இதற்கேற்றார்போல் அவர்கள் பின்பற்றும் போது, இடர்பாடுகளோ, சொத்து வாங்கிய பின் ஏமாற்றங்களோ, இழப்புகளோ சந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. திசைகளையெல்லாம் கூட சொல்கிறோம். என்ன தசா புத்தி நடக்கிறது என்பதை அடிப்படையாக வைத்து, இந்தக் கோள்களுக்கு இந்த திசை என்று சுக்ர திசை என்றால் தெற்கு, தென்கிழக்கு திசையில் வாங்குங்கள் என்றெல்லாம் சொல்கிறோம்.

இதுபோன்று கலந்தாலோசித்து வாங்கும் போது, தலைமுறை தலைமுறையாக அந்தச் சொத்து தங்கும். அதில் மாற்றம் இல்லை.